Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

47 வயதிலும் தகதகவென ஜொலிக்கும் நடிகை ரோஜா..! – வைரலாகும் நச் போட்டோஸ்..!

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை ரோஜா தெலுங்கு திரைப்படங்களிலும் பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்ட இவர் தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவில் சுற்றுலாக்கிவிட்டார். திரைப்படங்களையும் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து அரசியலில் காலடி எடுத்து வைத்த இவர் பல்வேறு சர்ச்சைகளை எதிர் கொண்டார்.

குறிப்பாக இவர் போட்டியிட்ட தேர்தல்களின் போது நடிகை ரோஜாவின் பெயரில் இணையத்திலும் வீசிடி கேசட்டுகள் வடிவத்திலும் வைரலாகி கொண்டிருந்த ஒரு மோசமான படத்தை அந்த தொகுதி மக்களுக்கு இணையம் வாயிலாக வைரலாக்கினர் இவருடைய எதிர்க்கட்சியினர்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார் நடிகை ரோஜா. ஆனால், அந்த தேர்தலில் இவர் வெற்றி பெற்றார். தற்போது 47 வயதாகும் இவர் தற்போதும் ரசிகர்களை கவரும் விதமாக அழகு தேவதையாகவே ஜொலிக்கிறார்.

கொஞ்சம் கூட கவர்ச்சியில்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

--Advertisement--

அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் ஒரு துறையின் அமைச்சராகவும் பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை ரோஜா இணைய பக்கங்களிலும் அவ்வப்போது வித்தியாசமான மாடலான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், புடவை சகிதமாகவும், சுடிதார் சகிதமாகவும் விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சமீபத்திய ஒரு பேட்டியில் எனக்கு பிடித்த உடை என்றால் அது புடவை தான் புடவை தான் ஒரு பெண்ணை முழுமையாக்கு கிறது என்பதை நான் உணர்கிறேன். மாடர்னான உடைகளை அணியவும் எனக்கு பிடிக்கும். ஆனால் புடவைகள் எனக்கு எப்பவும் ஃபேவரைட் தான் என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை ரோஜா.

இந்நிலையில், இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இவருடைய மகளின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோவை இணையத்தில் பரப்பி பெரும் சர்ச்சையை கிளப்பினார்கள்.

சில ஆசாமிகள் இது குறித்து தன்னுடைய வேதனையை பகிர்ந்த நடிகை ரோஜா நான் பொதுவாழ்க்கையில் இருக்கிறேன் என்பதற்காக என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் பாதிக்கப்பட வேண்டுமா..? என்று சோகமாக பேசியிருந்தார்.

என்னுடைய நண்பர்கள் சிலர் கூட அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என்கிறார்கள். நான் அரசியலில் இருக்கிறேன் என்பதற்காக என்னுடைய மகளின் புகைப்படங்களை இப்படி மார்ஃப் செய்து வெளியிடுவார்களா..? நான் என் மகளுக்கு என்ன பதில் கூறுவேன்.

அரசியலில் இருப்பது அவ்வளவு பெரிய பாவமா..? என்று கேட்டேன். ஆனால் என் உடன் இருப்பவர்களை இதெல்லாம் சாதாரணம் என்று என்னுடைய எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள்.

இப்படியான தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் நடிகை ரோஜா. இந்நிலையில், இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 47 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Summary in English : Actress Roja has recently won the hearts of her fans with her latest photos that have gone viral on social media. At the age of 47, she looks more youthful than ever and has been praised for her timeless beauty and grace. Her pictures have inspired a lot of people who are in their 40s to be confident in their own skin and continue to inspire others with her ageless elegance.

Continue Reading
 

More in

Trending Now

To Top