இதனால் தான் எனக்கு பாய் ப்ரெண்ட் இல்ல.. கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.


இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக முதல் முதலில் பணியை ஆரம்பித்தார். இதனை அடுத்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மானட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு பரிசினை பெற்றார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்..

இதனை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நீ தானா அவன் என்ற திரைப்படத்தில் 2010-ஆம் ஆண்டு நடித்தார். இதை அடுத்து 2012-ல் அட்டகத்தி படத்தில் அமுதா என்ற கேரக்டரை சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க: ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம்.. உதவியளாரின் சம்பளம் மட்டும் இவ்வளவா..? ரேஷ்மா பசுபுலேட்டி ஓப்பன்டாக்…!


தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்தில் அர்ஜுன் ராம்பாலோடு இணைந்து 2017-ல் டாடி என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் வெற்றிமாறனின் வடசென்னை திரைப்படத்தில் பத்மா கேரக்டரில் நடித்து நல்ல பேமஸ் ஆனார்.

மேலும் இவர் 2014-இல் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதை பெற்றிருக்கிறார். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் கூறியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால தான் பாய் பிரண்ட் இல்லை..

இதற்குக் காரணம் என்ன பேட்டியில் அவர் 24 * 7 என்ற முறையில் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பதின் காரணத்தால் தான் இவருக்கு பாய் பிரிண்ட் இல்லை என்ற கருத்தை பதிவு செய்து இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த விஷயத்தை ட்விட்டரிலும் பகிர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் தொடர்ந்து பணி செய்வதால் தனக்கான நேரத்தை ஒதுக்குவதே கடினம் இதில் எப்படி பாய் ப்ரெண்ட் எனவே தான் எனக்கு பாய் ப்ரெண்ட் இல்லை என்று சொல்லி இருப்பதாக தன்னுடைய எதார்த்தத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் புதிய பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிடுவார்.

கூச்சமின்றி பேசிய ஐஸ்வர்யா..

அண்மை பேட்டியை பார்த்த பலரும் இவர் சொன்னதில் உண்மை உள்ளது. தொடர்ந்து ஷூட்டிங் செல்லும் போது இவருக்கு தன் பாய் பிரண்டோடு செலவிட நேரமில்லை என்பது தான் உண்மை. எனினும் அவருக்கு பாய் பிரண்டே இல்லை என்பது அவர் சொன்ன பிறகு தான் தெரிந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: சோனியா அகர்வால் விவாகரத்திற்கு பிறகு.. செல்வராகவன் குறித்து ரகசியம் உடைத்த மனைவி..!


தொடர்ந்து படப்பிடிப்பு, புதிய படங்கள் என பிஸியாக இருப்பதின் காரணத்தால் தான் தனக்கு பாய் பிரண்ட் இல்லை என்ற விஷயத்தை துணிந்து சொல்லி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் அவர் கூறிய விஷயத்தில் உண்மை உள்ளதா? இல்லையா? என்று பட்டிமன்றம் போட்டு அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.