சோனியா அகர்வால் விவாகரத்திற்கு பிறகு.. செல்வராகவன் குறித்து ரகசியம் உடைத்த மனைவி..!

தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக திகழும் செல்வ ராகவன் பல சிறந்த படங்களை தந்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதையும் படிங்க: தூக்கில் பிணமாக மீட்கபட்ட முன்னணி தயாரிப்பாளர்..அதிர்ச்சி தகவல்..!


திரைப்படத்தின் பல முன்னணி நடிகர்கள், இசை அமைப்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களை வாழ்க்கையை சிறப்பித்த சிறந்த இயக்குனர் என்று சொல்லலாம்.

சோனியா அகர்வால் விவாகரத்துக்கு பின்..

திரைப்படங்களில் இயக்குவதோடு நின்று விடாமல் சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்து இருக்கக்கூடிய இவரின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருவார்கள்.

இவர் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருமளவு பேசப்பட்டதோடு வித்தியாசமான கதையம்சம் நிறைந்த படமாக சொல்லப்பட்டது. இதை அடுத்து இவர் இயக்கிய படங்கள் பலவும் அதிக அளவு வசூலை பெற்று தந்தது.


தனது சொந்த தம்பியை இவரது படங்களில் நடிக்க வைத்து இன்று முன்னணி நடிகராக மாற்றிய பெருமை இவரை சாரும். திரை உலகில் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் காதல் கோட்டை படத்தில் நடித்த நடிகை சோனியா அகர்வாலை உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இயக்குனர் செல்வராகவன் காதல் கோட்டை நடிகை சோனியா அகர்வாலை காதலித்து 2006-ஆம் ஆண்டு பெரியவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து மண வாழ்க்கை நல்ல முறையில் சென்று கொண்டு இருந்தாலும் அவர்கள் மனதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்றார்.

செல்வராகவன் குறித்து கீதாஞ்சலி..

இதனை அடுத்து இவர் 2011-ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பிள்ளை குட்டி என்று செட்டிலாக இருக்கிறார். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்று கீதாஞ்சலி செல்வராகவனுடன் ஏற்பட்ட காதல் குறித்து பேசி இருக்கிறார்.

இரண்டாம் உலகம் படத்தில் கதையை படித்த செல்வராகவன் மீது காதல் வந்தது. அந்த காதல் நான் செல்லச் செல்ல ஆழமாகிக் கொண்டே இருந்ததாக இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி சொல்லி இருக்கிறார்.

அத்தோடு முதல் பிரசவத்திற்கு பிறகு தாய்ப்பால் சரியாக சுரக்காத காரணத்தால் மன அழுத்தத்தில் இருந்த அந்த நேரத்தில் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பாராம். அந்த நேரத்தில் கோவத்துல தட்டு, டம்ளர் பறக்கும்.

ரகசியம் உடைத்த மனைவி..

அதை புரிந்து கொண்ட செல்வா என்னை நன்றாக பார்த்துக் கொண்டார் என்று சொன்ன விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் பிள்ளை பெற்ற சமயத்தில் ஒரு கணவன் மனைவியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணமாக இயக்குனர் செல்வா விளங்கியிருப்பதாக கீதாஞ்சலி பெருமையோடு சொன்ன விஷயம் ரசிகர்களின் மத்தியில் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படிங்க: நிவேதா பெத்துராஜ்.. துபாய் வீடு.. கோடிகளில் செலவு.. அத்தனையும் உண்மை.. ஆதாரத்துடன் நிற்கும் பிரபலம்..!

மேலும் இந்த விஷயமானது இணையத்தில் தற்போது படு வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இவர்களின் ஒற்றுமை குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.