உச்சகட்ட உணர்ச்சி பெற “அந்த” மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளினி.. தூக்கம் தொலைத்த டாக்டர் நடிகை..!

சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும் வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஆங்கில எழுத்து தொகுப்பாளினி.. திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

பிறகு, பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை விமர்சையாக செய்தால்தானே சிக்கல்.. ஒருவேளை.. நாளை கணவரை மீண்டும் பிரிய நேர்ந்தால் பெரிய பிரச்சனையாகும்.

மீண்டும் மீடியாக்களில் பெயர் அடிப்படும்.. எனவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டு கடந்த மூன்று ஆண்டு காலமாக குடித்தனம் நடத்தி வருகிறார். திருமணம் செய்து கொண்ட பிறகு அப்படியே சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.

இப்பொழுது எந்த ஊரில் இருக்கிறார் என்று கூட ரசிகர்கள் பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு மீடியா வெளிச்சத்திலிருந்து மறைந்து போயிருக்கிறார் தொகுப்பாளினி. தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டாலும் தன்னுடைய பழைய நண்பர்களை மறக்காமல் அவர்களுடன் போக்குவரத்துமாக தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் அம்மணி.

இதில் கொடுமை என்னவென்றால் முதல் திருமணம் செய்து கொண்ட போது தொகுப்பாளினுக்கு படுக்கை அறை சமாச்சாரங்களில் அந்த அளவுக்கு ஈடுபாடு இருந்தது கிடையாது. இதனாலேயே அவருடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.

--Advertisement--

அதன் பிறகு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தார் நடிகை என்றாலும் கூட இவருடைய சமீப கால நடவடிக்கைகள் சக நடிகைகளையே ஷாக் ஆகியிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பிரபலங்களின் பழக்கம் ஏற்பட்டு அவர்களுடன் இரவு நேர விருந்து, லாங் டிரைவ் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வது என வாழ்க்கையின் அடுத்த பக்கத்தை பார்த்து விட்ட தொகுப்பாளினிக்கு.. ஆடிய காலும்.. பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது போல படுக்கை அறை சமாச்சாரங்களில் அதீத நாட்டம் வந்திருக்கிறதாம்.

எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்கு நெருக்கமான ஆண் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக தன்னுடைய பொழுதை கழித்து வருகிறார். இரவு நேர விருந்துகள்.. வீட்டிற்கு தாமதமாக வருவது.. மது குடிப்பது… இதை அனைத்தையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளினியின் கணவர்.

ஆனால், சமீபத்தில் நடந்த கூத்து அந்த தொழிலதிபரையே தொகுப்பாளினியை வெறுக்கும் அளவுக்கு சென்று இருக்கிறது. படுக்கையறை சமாச்சாரங்களில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கும் நடிகை உச்ச கட்ட உணர்ச்சிக்காக அந்த மாத்திரைகளை பயன்படுத்தி வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேர பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்த அவர்.. இந்த முறை தனக்கு மிகவும் நெருக்கமான.. கட்டுமஸ்தான நடிகர் என்பதால் வழக்கத்துக்கு மாறாக அதிகப்படியான மாத்திரைகளை உட்கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து அவருடன் குடியும் கூத்துமாக இருந்த நடிகை அதிகமான மாத்திரை எடுத்துக் கொண்டதால் ஒரு கட்டத்தில் மயங்கியே விழுந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன கட்டுமஸ்தான நடிகர் உடனடியாக இருவருக்குமே தெரிந்த நடிகையும் பெண் டாக்டருமான தங்களுடைய தோழிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருக்கிறார்.

உடனடியாக அவருடைய மருத்துவமனையின் ஆம்புலன்சை அனுப்பி வைத்திருக்கிறார் நடிகை. ரிசார்ட் நிர்வாகத்திடம் அதிக மது போதையில் மயங்கி விட்டார் எனக் கூறி தொகுப்பாளனியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.

அங்கே நடிகையை பரிசோதித்த மருத்துவர் நடிகை அளவுக்கு அதிகமான அந்த மாத்திரையை எடுத்துக் கொண்டிருக்கிறார் தொகுப்பாளினி என்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்.

கடுமையான சிகிச்சை முறைகளை செய்து நடிகையை சுய நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார் மருத்துவர் நடிகை. இதனால், விடிய விடிய தூக்கம் தொலைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் அந்த நடிகை மருத்துவ நடிகை மூலமாகவே சின்னத்திரை வட்டாரத்தில் பரவி இருக்கிறது. ஒரு காலத்தில் அடக்க ஒடுக்கமாக இருந்து நடிகை இப்படி சேரக்கூடாத சேர்கையால் சீரழிந்து போயிருக்கிறார் என்று புலம்பி வருகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.

மட்டுமில்லாமல் சமீப காலமாக கடுமையாக உடல் எடையை குறைந்து போயிருந்தார் தொகுப்பாளினி.. அதற்கும் இவர் இப்படியான மாத்திரைகளை எடுத்துக் கொள்வது தான்.. என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.