இதனால் தான் நானும் ஆண்ட்ரியாவும் பிரிஞ்சுட்டோம்.. அனிருத் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

பார்த்ததும் காதல் பல நாள் பழகி ஏற்படும் காதல் இப்படி காதலில் பல வகைகள் உண்டு. அது ஏன் ஏற்படுகிறது என்பதை பலருக்கும் தெரியாது. அந்த வகையில் மிகச்சிறந்த நடிகையான ஆண்ட்ரியாவிற்கும் இளம் இசையமைப்பாளரான அனிருத்துக்கும் காதல் இருந்தது.

இதையும் படிங்க: மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

இதை அடுத்து இவர்கள் இருவரின் மீது பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் அதற்கு சாட்சியாக பல புகைப்படங்களும், வீடியோக்களும் வெளி வந்து அவர்கள் காதலில் விழுந்ததை உறுதி செய்தது.

நடிகை ஆண்ட்ரியா..

ஆரம்ப நாட்களில் நடிகை ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ் ஆகவும் திகழ்ந்தார். இதனை அடுத்து இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார்.

இதனை அடுத்து பல வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. எனினும் இவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து அனைவரையும் அசத்தியிருந்தார். இவர் தன்னை விட வயதில் குறைவான இசையமைப்பாளர் அனிருத்தோடு காதல் வயம் கொண்டார்.

இசையமைப்பாளர் அனிருத்..

அது போலவே இசையமைப்பாளர் அனிருத், ஆண்ட்ரியாவுடன் டேட்டிங் வரை சென்றிருக்கிறார். எனினும் திருமணம் என்ற பேச்சுக்கள் எழுந்த போது ஆண்ட்ரியா வேண்டாம் என்று ஒதுங்கியதற்கான காரணம் பற்றி தற்போது அண்மை பேட்டையில் பேசி ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி விட்டார்.

இதற்குக் காரணம் தான் ஆண்ட்ரியாவை உருக உருக காதலித்ததோடு மட்டுமல்லாமல் மியூசிக் ஸ்டுடியோவில் பல்வேறு சில்மிஷங்களை செய்த அனிருத் திருமணம் என்று வந்தவுடன் தலைதெரித்து ஓடியதற்கு காரணத்தை கூறி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

ஆண்ட்ரியாக இதனால் தான் நான் பிரிந்தேன்..

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ஆண்ட்ரியாவை பிரிவதற்கான காரணத்தை சமீபத்து பேட்டியில் கூறியிருக்கிறார். அதன் படி ஆண்ட்ரியாவிற்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருப்பதால் ஆண்ட்ரியா விற்கும் எனக்கும் இருந்த காதலை திருமணம் வரை கொண்டு செல்ல முடியவில்லை.

வயது வித்தியாசம் தான் ஆண்ட்ரியாவை பிரிவதற்கு முக்கிய காரணம் என அனிருத் கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் மியூசிக் ஸ்டுடியோவில் வைத்து ஆண்ட்ரியாவிற்கு லிப் லாக் அடிக்கும் போது உங்களுக்கு வயது வித்தியாசம் தெரியவில்லையா? என்று கேட்டிருக்கிறார்கள்.

விளாசும் ரசிகர்கள்..

மேலும் திருமணம் என்று யோசிக்கும் போது தான் வயது வித்தியாசம் எல்லாம் கண்ணுக்கு தெரிகிறதா? என்று விளாசி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருவதோடு இவர்கள் தெரிவித்து வயதை காரணமாக காட்டியதன் மூலம் அவர்கள் காதலித்தது உண்மையான காதல் இல்லை என்பதை இது நிரூபித்து விட்டது என்பதை சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: இதனால் தான் எனக்கு பாய் ப்ரெண்ட் இல்ல.. கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

மேலும் இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் இந்த விஷயம் பற்றி அவர்களுக்குள் இது உண்மை காதலா அல்லது வேறு வகையானதா? என்பது பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

ஆண்ட்ரியா அனிருத்தை நம்பி ஏமாந்த காரணத்தால் தான் அதிக அளவு சினிமாவில் கவனத்தை செலுத்த முடியாமல் தனது கெரியரை தொலைத்து விட்ட என்று ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் புலம்பித் தள்ளி இருக்கிறார்கள்.