காசு சம்பாதிக்க வேற வழியே இல்லையா.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.. அனிதா சம்பத்தை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..

காசு சம்பாதிக்க வேற வழியே இல்லையா.. இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்.. அனிதா சம்பத்தை கழுவி ஊத்தும் ரசிகர்கள்..

பாலிமர் டிவி, நியூஸ் 7, தமிழன் போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனிதா சம்பத் இதனை அடுத்து சன் டிவியில் இணைந்து பணியாற்றி தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார்.

செய்தி வாசிப்பாளராக விளங்கும் அனிதா சம்பத் சில திரைப்படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து பல படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருக்கிறார்.


அனிதா சம்பத்..

ஆரம்ப காலங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாக இருந்தாலும் தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் வாய்ப்புகள் பெற்றதை அடுத்து இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க: 10000 கோடி சொத்து.. நெப்போலியனின் சொல்லப்படாத பக்கங்கள்..ரகசியம் உடைத்த பிரபலம்..!

இதனை சரியான முறையில் பயன்படுத்தியதை அடுத்து பல திரைப்படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தக்கூடிய கேரக்டர் ரோல்கள் கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.


மேலும் இவர் தன்னோடு வேலை பார்த்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர ஜோடிகளாக திகழும் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல கஷ்டங்களை பட்டுத்தான் இந்த லெவலுக்கு முன்னேறி இருக்கிறார்கள்.

காசு சம்பாதிக்க வேறு வழி தெரியலையா..

சின்னத்திரை, பெரிய திரை என்று இரண்டிலும் சரிசமமாக தனது பங்கினை செய்து வரும் அனிதா சம்பத் தனக்கு என்று சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது.

அண்மை காலமாக நம் தேசத்திற்கும் மாலத்தீவிக்கும் இடையே சில புகைச்சல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அனிதா சம்பத் அங்கு எடுத்த புகைப்படங்களை வீடியோவாக பதிவேற்றி இருக்கிறார்.


இந்த டிராவல் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் சம்பாதிக்க வேற வழியா இல்லை என்று அவரை திட்டி தீர்த்து இருப்பதோடு இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..

இந்திய அரசானது மாலத்தீவு அரசு பிரச்சனையில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் மாலத்தீவில் வாழும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வரும் வேளையில் மாலத்தீவுக்கு இந்திய மக்கள் சுற்றுலா பயணம் செல்வதை தவிர்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இணையத்தில் கசிந்த விசித்ராவின் அந்த புகைப்படம்.. யாரோட வேலை என ஒப்பனாக கூறிய விசித்ரா..!

இந்த சமயத்தில் தன் கணவனோடு மாலத்தீவு சென்று வந்த அனிதா சம்பத் அது நிமித்தமான வீடியோவை வெளியிட்டு இருப்பதை பார்த்து நெட்டிசன்கள் உங்களுக்கு செல்ல வேறு இடம் கிடைக்கவில்லையா? இந்தியாவை அவமதிக்கும் செயலாக இது உங்களுக்கு தோன்றவில்லையா? என்று திட்டி தீர்த்து இருக்கிறார்கள்.


அத்தோடு காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று அனிதா சம்பத்திடம் கேள்வியை வைத்து அவர் செய்ததில் தவறு உள்ளது என்பதை சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் காசு சம்பாதிக்க வேறு வழியே இல்லையா? இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம் என்று நெட்டிசன்கள் அனைவரும் அனிதா சம்பத்தை படு கேவலமாக பேசி இருக்கிறார்கள்.

மேலும் மாலத்தீவு தவிர வேறு இடங்களுக்கு செல்ல முடியாதா? அல்லது இந்தியாவில் உனக்கு வேறு இடம் ஏதும் இல்லையா? என்பது போல பல்வேறு கேள்விகளையும் முன் வைத்து இருக்கிறார்கள்.

   

--Advertisement--