கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

கூவத்தூருக்கு வந்த 6 முன்னணி நடிகைகள்.. 7 நாட்கள் நடந்த கூத்து.. பிரபல நடிகர் கூறிய தகவல்..!

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று கூறுவதற்கே முகம் சுழிக்கக்கூடிய வகையில் தற்போது கூவத்தூர் விவகாரம் வெடித்து பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

மேலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எம்எல்ஏக்களுக்கு தூக்குவாளி தூக்கி இருக்கும் இந்த ஜனநாயகத்தை எப்படி பார்ப்பது என்று தெரியாமல் பலரும் தற்போது புலம்பி வருகிறார்கள்.

கூவத்தூர் கூத்து..

ஓரிரு நாட்களுக்கு முன்பு கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கி இருந்த விடுதிக்கு அவர்களை மகிழ்விப்பதற்காக நடிகைகள் வரவழைக்கப்பட்டார்கள் என்று அவதூறு பேட்டியை அதிமுகவின் முன்னாள் நிர்வாகி பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.


மேலும் 2017 ஆம் ஆண்டு கூவத்தூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அதிமுக எம்எல்ஏக்கள் வேறு அணியில் தாவி விடாமல் இருப்பதற்காக தங்க வைக்கப்பட்டு அங்கு திரை மறைவில் சட்டத்திற்கு புறம்பான பல்வேறு விஷயங்கள் நடந்ததாக அன்றே பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்தது.

இதனை அடுத்து தற்போது இந்த பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்திருப்பதை அடுத்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் இயக்குனர் சேரன் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பல தங்களது கண்டனங்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

6 முன்னணி நடிகைகளோடு நடந்த..

இதற்குக் காரணம் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு பேசுகையில் அந்த கூவத்தூர் தனியார் விடுதியில் தங்கி இருந்த போது நடிகைகள் அழைத்துவரப்பட்டதாக தெரிவித்ததோடு நடிகை திரிஷாவின் பெயரை வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தது வலைத்தளங்களில் வைரலானது.


இதையும் படிங்க: கூவத்தூர் ரெசார்ட்டில் 30 நடிகைகளுடன் ஜல்சா.. திரிஷா பத்தினியா..? ரகசியம் உடைத்த பிரபலம்..!

அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் பற்றி பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது கூவத்தூர் விவகாரம் குறித்தும் பேசினார். இதில் குறிப்பிடும் படியாக நடிகை திரிஷாவை பற்றி அவர் பேசிய போது நான் சொல்வது என்னவென்றால் திரிஷா அங்கு சென்றாரா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. எந்த நடிகையும் எந்த சட்டமன்ற உறுப்பினர் அழைத்தார் என பொது வெளியில் சொல்லவில்லை.

பிரபல நடிகர் தகவல்..

அப்படி இருக்கும் போது மூன்றாவதாக ஒரு நபர் பிரபல நடிகையின் மீது சேற்றை வாரி பூசுவது தவறான விஷயம். அவரிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படியேனும் பொது வெளியில் ஒரு நடிகையைப் பற்றி அவதூறாக பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது.

அங்கே ஏன் திரிஷாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது பெயரை இந்த விசயத்தில் முன் நிறுத்த வேண்டும் என்பது ஏதோ ஒரு சிறு பிள்ளைத்தனமாக உள்ளது. இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.


மேலும் 6 முன்னணி நடிகைகள் வந்தார்கள் என்று கூறுகிறார்கள். ஏழு நாட்கள் தொடர்ச்சியாக அங்கே தங்கி இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஆதாரம் அற்றவை. சம்பந்தப்பட்ட சம்பவம் சார்ந்த நபர்கள் அல்லது நடிகைகள், அந்த ஹோட்டலில் வேலை செய்தவர்கள் என அப்படி ஏதாவது பேசி இருந்தால் அது குறித்து பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. எதுவுமே இல்லாமல் ஒரு பிரபலத்தின் மீது சேற்றை வாரி பூசுவது சரியான செயலாக படவில்லை.

இதையும் படிங்க: ரீ-என்ட்ரி கொடுக்கும் தாமிரபரணி பானு.. ஹீரோ யாரு தெரியுமா..?

மேலும் யாராவது ஒருவர் வெளியே வந்து இது மாதிரி தான் நடந்தது என்று கூற வேண்டும். அவர்கள் அந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் நாம் அதைப் பற்றி பேசலாம். அது வரை இந்த விவகாரத்தை பேசவோ பெரிது படுத்தவோ அவசியம் இல்லை என நினைக்கிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் பக்குவமாக தனது கருத்துக்களை பகிர்ந்து விட்டார்.