உன்கூட *** வச்சிக்கணும்… உன்னோட ரேட் என்ன..? தொகுப்பாளினியிடம் நேரடியாக கேட்ட பிரபல நடிகர்..!

சோசியல் மீடியாக்களில் எப்போது நியூக்ளியர் பாம்களை போல சில பிரச்சனைகளை பேசி பலரையும் தன் பக்கம் கவனத்தை திருப்ப கூடிய வகையில் விஷயங்களை பகிரக் கூடிய பிரபல நடிகர் அண்மையில் கேட்ட கேள்வியானது ரசிகர்களை ஷாக்காக வைத்து விட்டது.

இந்த விவகாரமான சர்ச்சை வேகமாக பரவக்கூடிய வகையில் பேசியவர் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியராக அறிமுகமானவர். இதனை அடுத்து ஆயுசு நூறு, தர்மதுரை, தெனாலி, பம்மல் கே சம்பந்தம் என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் கட்டுமஸ்தான ஆசாமி.

மேலும் இந்த நபர் நடிப்பதோடு நின்று விடாமல் சினிமா பத்திரிக்கையாளராக செயல்பட்டு வருகிறார். தனது சினிமா அனுபவத்தைக் கொண்டு நடிகர் மற்றும் நடிகைகளை எல்லை மீறி விமர்சிப்பது இவரது தனி ஸ்டைல் என கூறலாம். சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி அவ்வப்போது வீடியோக்களை வெளியிடுவார்.

யார் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இந்த நபர் அண்மையில் தொகுப்பாளனி ஒருவரிடம் மோசமாக பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

அந்த வகையில் அந்த தொகுப்பாளினி அந்த நடிகரிடம், நடிகர் நடிகையின் அந்தரங்க விஷயங்களை பேசுவது அவர்களது குடும்ப வாழ்க்கையை பாதிக்காதா? அவர்களின் குடும்ப வாழ்க்கை எப்படி போனால் உங்களுக்கு என்ன? காசு வந்தால் போதுமா? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு இருக்கிறார்.

இதற்கு பதில் அளித்த அவர் என்னைப் பற்றி ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். ஆதாரம் இல்லாமல் நான் எப்போதும் பேச மாட்டேன். என்னை வளர்த்து விட்டவர்கள் புரட்சித்தலைவர், பாக்யராஜ் போன்ற நல்ல மனிதர்கள்.

எனவே என் பேச்சில் நிச்சயம் பொய், புரட்டு இருக்காது. சினிமாவில் இருக்கும் இது போன்ற அவலங்களை நீக்க தான் இவ்வாறு பேசுகிறேன் என்றார். அதற்கு அந்த நடிகரை அதே சினிமாவில் நீங்களும் தான் இருக்கிறீர்கள் என்று கூற இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒரு கட்டத்தில் டென்ஷனான நடிகர் மற்றும் திரை விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் என் வெய்ட்டுக்கு, உன்ன எட்டி மிதச்சா நீ சட்னி ஆகிவிடுவாய்.. என்று எல்லை மீறி பேசி இருக்கிறார்.

தொகுப்பாளினி நீங்கள் முன்பு தான் பயில்வான் இப்போது நொந்த பயில்வான் என்று நக்கல் அடிக்க கோபத்தின் உச்சிக்குச் சென்ற இவர் எனக்கு பாடி டிமாண்ட் அதிகம் உன் ரேட் என்ன? ரூமுக்கு வா? நான் பயில்வானா? இல்லையா? என்பதை காட்டுகிறேன் என்று படு மோசமான மொழியில் பேசினார்.

மேலும் பொது வெளியில் பெண்னை மோசமாக பேசியிருக்கும் பயில்வான் ரங்கநாதனை குறித்து தற்போது நெட்டிசன்கள் கடுமையாக திட்டி கழுவி ஊற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த பேச்சானது தற்போது இணையத்தில் சர்ச்சைகளை கிளப்பி விட்டு இருப்பதோடு பயில்வானின் பெயரை டேமேஜ் செய்து விட்டது.