ஷகீலா கூறிய தகவல்.. மகளுக்கு நிச்சயதார்த்தம் முடித்த பயில்வான் ரங்கநாதன்..! மாப்ள யாருன்னு பாருங்க..!

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களாக இருந்து பல்வேறு நடிகர் மற்றும் நடிகைகளை வகை வகையான விமர்சித்து இணையங்களில் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் வாயால் பேசி வகையாய் மாட்டிக் கொள்வார்.

 

மேலும் இவர் பல நடிகர் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை புட்டு புட்டு வைத்து அனைவரையும் அதிர்ச்சிகள் தள்ளி விடுவார். அந்த வகையில் இவர் தன் மகளின் நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பேசிய பேச்சானது வைரலாகி உள்ளது.

பயில்வான் மகளுக்கு நிச்சயதார்த்தம்..

பயில்வான் பேச்சினை கேட்டு இணையத்தில் இருக்கக்கூடிய இணையதள வாசிகள் இவருக்கு எதிராக தற்போது கொந்தளித்து வருகிறார்கள். மேலும் சமீப காலமாக அவர் பேசக்கூடிய வார்த்தைகள் அனைவரையும் சுடக்கூடிய வகையில் இருந்தது என்று சொல்லி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு பயில்வான் மற்றும் நடிகை ஷகீலா இருவரும் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தது இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியது. இதில் பல நடிகைகளை பற்றி பேசி வரக்கூடிய சூழ்நிலையில் தன் மகளை லெஸ்பியன் என்று சொன்னதை ஏற்றுக்கொள்ளவில்லை.

---- Advertisement ----

இந்த சூழ்நிலையில் தன் மகளை நடிகை ஷகீலா லெஸ்பியன் என்று சொன்னதை அடுத்து அவரை வறுத்து எடுத்ததோடு மட்டுமல்லாமல் வெளுத்து வாங்கக் கூடிய வகையில் பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தார்.

ஷகீலா கூறிய தகவல்..

இதனை அடுத்து பயில்வான் இப்படி பேச வேண்டாம் உங்கள் நாக்கு அழுகிப் போகும் என்று கோபப்பட்டு நடிகை ஷகீலா பேசியிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அது மட்டும் அல்லாமல் பிரபல பாடகி சுசித்ரா கூட பயில்வான் குறித்து சில அவதூறு செய்திகளை பரப்பியிருந்தார்.

 

மேலும் இந்நிலையில் லெஸ்பியன் என்று கூறப்பட்டு வந்த பயில்வான் ரங்கநாதனின் மகளுக்கு அவர் வீட்டிலேயே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான புகைப்படங்கள் இணையங்களில் வெளி வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாப்ள யார் தெரியுமா?

இதற்கு காரணம் என்னவென்றால் ஏற்கனவே பயில்வான் மகள் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஒரு ஆணோடு நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தக் கூடிய வகையில் இணையங்களில் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. 

மேலும் சில ரசிகர்கள் ஷகீலா கூறிய தகவல் பொய்யானது என்பதை பிரகடனப்படுத்தத் தான் இவர் தனது மகளுக்கு நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கலாம் என்று பேசி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் இனி மேலாவது அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் இருப்பது மிகவும் நல்லது என்று கூறி இருப்பதோடு இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் தலையிட்டு பேசுவது ஒரு பொழப்பா என்று முகத்தில் அடித்தது போல் கேட்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த விஷயத்தை ரசிகர்கள் அனைவரும் அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து வருவதோடு மட்டுமல்லாமல் இணையத்தில் அதிகளவு  படிக்கின்ற விஷயமாக மாற்றி விட்டார்கள்.

---- Advertisement ----