சிட்டிசன் நடிகையை நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

சிட்டிசன் நடிகையை நியாபகம் இருக்கா.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தல அஜித் படம் என்றால் அனைவருக்கும் மிக பிடிக்கும். தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்தின் படமான சிட்டிசன் படம் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா?


இந்த சிட்டிசன் படத்தில் நடித்த நடிகை வசுந்தரா தாஸ் தற்போது எப்படி இருக்கிறார் என்று தெரிந்தால் நீங்கள் ஆடிப் போவீர்கள்.

சிட்டிசன் பட நடிகை..

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை வசுந்தரா தாஸ் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே மிகச்சிறந்த பாடகியாக வலம் வந்தவர். இவர் பாடிய பல பாடல்கள் என்றும் ரசிகர்களின் மனதில் முணு முணுத்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: ஓவரா பேசுற.. வாயை ஒடச்சிடுவேன்.. சிம்புவை மிரட்டிய பிரபல நடிகரின் மகன்..!

திரைப்படங்களில் பின்னணி பாடல் பாடியதோடு மட்டுமல்லாமல் கர்நாடக இசை நிகழ்ச்சிகளிலும் பாடி அனைவரையும் அசத்து இருக்கிறார். இரண்டே தமிழ் படங்களில் நடித்திருக்கும் இவர் ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்துக் கொண்டவர்.

---- Advertisement ----


இவர் 1999-ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கி வெளி வந்த ஹேராம் திரைப்படத்தில் கமலின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்த படம் மிகப்பெரிய அளவு வெற்றியைத் தந்து வசந்தராவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் ராவணப்பிரபு என்ற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து அசத்து இருக்கிறார்.

இப்ப எப்படி இருக்காங்க..

இந்நிலையில் தற்போது அஜித் பல கெட்டப்புகளை போட்டு ரசிகர்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்த படமான சிட்டிசன் படத்தில் இவர் அவரோடு இணைந்து நடித்திருக்கிறார்.

இந்தபடத்தில் அத்திபட்டி என்ற ஒரு கிராமமே மறைக்கப்பட்டு இருந்தது. இது உண்மையில் நடந்ததா? என்று கேட்கக் கூடிய வகையில் இருந்தது. மேலும் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

நீங்களே பாருங்க..

சக்கலக்க பேபி சக்கலக்க பேபி என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் முதல் முதலாக பாடிய வசுந்தரா தாஸ் ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு பாடல்களை பாடி பரவசத்தை ஏற்படுத்தியவர்.


சிட்டிசன் படத்தில் சிக்கி மூக்கு கல்லு.. ஏய் பூக்காரா.. போன்ற பாடல்களை பாடி அசத்தியவர். எனினும் தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் சரியாக அமையாத காரணத்தால் நடிப்பதில் இருந்து விலகினார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது வைரலாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் தனது அம்மாவோடு இருக்கும் போட்டோவை இவர் ஷேர் செய்திருக்கிறார்.


இதையும் படிங்க: ஓஹோ.. கல்யாணத்துக்கு முன்னாடியேவா..? வெளிநாட்டில் வரலட்சுமி.. வைரலாகும் போட்டோஸ்..

இந்த புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இவரது முக ஜாடை மட்டுமல்லாமல் உருவ அமைப்பும் மாறி உள்ளது இதற்கு காரணம் அவர் வெயிட் போட்டு இருக்கிறார் என்பதை பார்த்ததும் ரசிகர்கள் பக்குவமாக சொல்லிவிட்டார்கள்.

இந்த புகைப்படத்தை தான் இணையதள வாசிகள் தொடர்ந்து பார்த்து வருவதோடு அட நம்ம வசுந்தராவை இவங்க என்று கேட்கும் இருக்கிறார்கள்.

---- Advertisement ----