ஓவரா பேசுற.. வாயை ஒடச்சிடுவேன்.. சிம்புவை மிரட்டிய பிரபல நடிகரின் மகன்..!

ஓவரா பேசுற.. வாயை ஒடச்சிடுவேன்.. சிம்புவை மிரட்டிய பிரபல நடிகரின் மகன்..!

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு என்கிற சிலம்பரசன், டி ராஜேந்திரனின் மகன் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.


நடிகர் சிம்பு தன் தந்தை டைரக்ட் செய்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று முன்னணி நடிகராக திகழ்கிறார். என்றும் தமிழ்நாட்டில் இருக்கும் இல்லங்களின் செல்ல பிள்ளையாக சிம்பு இருக்கிறார்.

நடிகர் சிம்பு..

நடிகர் சிம்புவும் தனது தந்தையைப் போலவே பன்முக திறமையை கொண்டவர். ஒவ்வொரு படங்களிலும் மிகச் சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: திம்சு கட்டையின் திருவிளையாடல்.. ஒரே நேரத்தில் அப்பா மகன் இருவருக்கும் சுண்ணாம்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சிம்பு இடையில் உடல் எடை கூடி சரியான நேரத்திற்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராத காரணங்களாலும் சில தீய பழக்க வழக்கங்களாலும் திரைப்பட வாய்ப்புகளை இழந்தார்.

இதனை அடுத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து தனது அபார திறமையை வெளிப்படுத்தி மீண்டும் திரையுலகில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.


ஓவரா பேசினா வாய உடைப்பேன்..

இவர் நடிப்பில் வெளி வந்த காதல் அழிவதில்லை முதல் அலை, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா போன்ற பல படங்கள் ஹிட் படங்களாக மாறியது. இதனை அடுத்து பத்து தல படத்தில் தனது பக்குவமான நடிப்பை வெளியிட்டு இருக்கக்கூடியவர் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்.

இவருக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வரக்கூடிய வேளையில் மீண்டும் உடல் எடை குறைத்து அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

சிம்புவை மிரட்டிய பிரபல நடிகரின் மகன்..

இந்நிலையில் நடிகர்களை பொருத்த வரை வெளியில் தான் கட்டித் தழுவி கொஞ்சி குலாவி நண்பர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் மனதில் தன் டன் கணக்கில் பொறாமையும் வஞ்சகமும் இருக்கும் என சொல்லலாம்.


அந்த வகையில் நடிகர் சிம்பு வளர்ந்து வரும் நேரத்தில் யாருமே பேசியதில்லை. கௌதம் மேனன் மட்டும் தான் அவரைப் பற்றி பக்குவமாகவும் நல்ல விஷயங்களை கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு வளர்ந்து வந்த நேரத்தில் ஒரு நாள் நடிகர் அருண் விஜயிடம் ஏடாகூடமாக பேசி இருக்கிறார். இதனை அடுத்து கோபம் கொண்ட அருண் விஜய் சிம்புவின் சட்டையைப் பிடித்து ஓவரா பேசினா போலந்துடுவேன் பாத்துக்கோ என பேசிய பேச்சு முற்றி கலகலப்பாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: கடைசி வரை மோகன் இதை பண்ணவே இல்ல.. ரகசியம் உடைத்த இயக்குநர் யார் கண்ணன்


இதனை அடுத்து அருண் விஜய் சிம்புவை எகிறி அடிக்க கை ஓங்கி சென்றதாக பத்திரிக்கையாளர் கூறிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு உடனே அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அழைத்துச் சென்றதாகவும் சொல்லி இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே செக்கச் சிவந்த வானம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள் என்பது உங்கள் நினைவில் இருக்கலாம். தற்போது இந்த விஷயம் தான் இணைங்களில் வைரலாக பரவி வருவதோடு அருண் விஜய் நடிகர் சிம்புவை அடிக்க சென்றாரா என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியோடு பேசி வருகிறார்கள்.

   

--Advertisement--