Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அய்யோ கடவுளே.. கடைசி வரை நிறைவேறாமலே போன டேனியல் பாலாஜியின் ஆசை.. ரசிகர்கள் கண்ணீர்..!

Tamil Cinema News

அய்யோ கடவுளே.. கடைசி வரை நிறைவேறாமலே போன டேனியல் பாலாஜியின் ஆசை.. ரசிகர்கள் கண்ணீர்..!

தமிழ் திரை உலகில் வில்லனாக நடித்த அசோகன் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். அவரைப் போலவே தனது வித்தியாசமான அசுர நடிப்பில் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் படத்தில் வில்லனாக நடித்த டேனியல் பாலாஜி தற்போது நம்மை விட்டு மறைந்து விட்டார்.

இதையும் படிங்க: தொகுப்பாளினி DD-யின் சொத்து மதிப்பு தெரியுமா..? கிறுகிறுன்னு வருதே..


இவரது மறைவு திரை உலகில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் எதற்காக ஆசைப்பட்டு டேனியல் பாலாஜி திரைக்குள் சினிமாவில் நடித்தாரோ அந்த ஆசை கடைசி வரை நிறை மாறாமல் போய் உள்ளது.

யார் இந்த டேனியல் பாலாஜி..

1975-ஆம் ஆண்டு பிறந்த டேனியல் பாலாஜி தனது தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர். இவருடைய அண்ணன் முரளி தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த போதும் அவரது பெயரை சினிமாவில் எந்த இடத்திலும் சொல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னேறியவர்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் சென்னை தரமணியில் இருக்கும் திரைப்பட நிறுவனத்தில் திரைப்பட தயாரிப்பு படிப்பினை படித்த இவர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்ததை அடுத்து கமலஹாசனின் மருதநாயகம் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

--Advertisement--

இந்த படம் இடையில் நின்று போனதால் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் சித்தி சீரியலில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தான் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து தொடர்ந்து பல படங்களில் தனது நடிப்புத் திறனை காட்டிய இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் பிணமாக காட்டும் காட்சிக்காக அமெரிக்காவில் பல டாலர்கள் கேட்டபோது அந்த வேடத்தை நான் போடுகிறேன் என்று தானாக முன்வந்து கௌதம் மேனனுக்கு உதவி செய்து இருக்கிறார்.


கடைசி வரை நிறைவேறாத ஆசை..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து அசத்திய இவர் சினிமாவில் நுழைந்ததே இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான். அதற்காகத்தான் தரமணி திரைப்பட கல்லூரியில் சேர்ந்து படித்து இருக்கிறார்.

கடைசியில் ஒரு படத்தையாவது இயக்க வேண்டும் என்று நினைத்த இவர் ஒரு படத்தையும் இயக்கம் இயக்காமல் தனது கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்து இருப்பதாக அவரது உறவினர்கள் புலம்பி இருக்கிறார்கள்.


இந்நிலையில் டேனியல் பாலாஜியின் மறைவு செய்தியை கேள்விப்பட்ட திரை உலக பிரபலங்கள் இரவோடு இரவாக மருத்துவமனையில் குவிந்தனர். இவரது கண்களை தானம் செய்ய இருப்பதால் அறுவை சிகிச்சை முடிந்ததும் டேனிகளின் உடலை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்ததை அடுத்து திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதை அடுத்து டேனியல் இயக்குனராக வரவேண்டும் என்ற ஆசை கடைசி வரை நிறை மாறாமல் போனதே என்பதை பற்றி ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களோடும் கலந்து உரையாடி வருகிறார்கள்.


இதையும் படிங்க: வாரிசு நடிகையின் தாராள மனசு.. அதுக்கு ஓகேவாம்.. புக் பண்ணா டபுள் கொண்டாட்டம்.. குவியுது வாய்ப்பு.

இந்த விஷயம் தற்போது ட்ரெண்டிங் ஆன விஷயமாக சமூக வலைதளங்களில் பரவி வருவதால் ரசிகர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாக சொல்லி இருக்கிறார்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top