கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

நடிகை தேவயானி, கடந்த 1990, 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான, முன்னணி நடிகையாக இருந்தவர்.

தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிறமொழி படங்களிலும் அதிக எண்ணிக்கையில் நடித்தவர்.

தேவயானி

தேவயானி ஆரம்பத்தில் ஓரிரு படங்களில் கவர்ச்சியாக தான் நடித்தார். மாடர்ன் டிரஸ்சிலும் தோன்றியிருக்கிறார். ஆனால் இயக்குநர் அகத்தியன் அவரை காதல் கோட்டை படத்தில் கமலி என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார்.

நடிகர் அஜீத்குமார் ஹீரோவாக நடித்த இந்த படத்தில், அஜீத், தேவயானி பார்க்காமலேயே கடிதம் மூலம் காதல் செய்து, பிறகு கிளைமேக்ஸில் இருவரது நேருக்கு நேர் சந்திப்பது போல் படம் இயக்கி இருந்தார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இந்த படத்துக்கு பிறகுதான் அஜீத்குமார், தேவயானி இருவருமே தமிழ் சினிமாவில் முக்கிய நாயகன், நாயகியாக மாறினார்கள்.

--Advertisement--

சூரிய வம்சம்

சூரிய வம்சம், காதல் கோட்டை, நீ வருவாய் என, தொட்டாச்சிணுங்கி, பூமணி, ஆனந்தம், மறுமலர்ச்சி, பெரிய இடத்து மாப்பிள்ளை, கிழக்கும் மேற்கும், நினைத்தேன் வந்தாய், சொர்ணமுகி, மூவேந்தர், கும்மிப்பாட்டு, தொடரும் என பல ஹிட் படங்களில் தேவயானி நடித்தார்.

இதையும் படியுங்கள்:  அருண் விஜய் அம்மாவால் தான் நான் இதை கத்துகிட்டேன்.. இதை சொல்றதுக்கு எனக்கு கூச்சமில்ல.. வனிதா ஓப்பன் டாக்..

குடும்பப்பாங்கான கேரக்டர் என்றாலே, அந்த இடத்தில் முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் நடிகை தேவயானி தான். குறிப்பாக சூரியவம்சம் படத்தில் படிக்காத சின்ராசுவை கட்டி, கலெக்டராக வாழ்க்கையில் உயர்வார் தேவயானி.

இட்லி உப்புமா

இந்த படத்தில், தேவயானி செய்த இட்லி உப்புமா, அந்த படம் வெளியான சமயத்தில் டிரண்டிங் ஆக பேசப்பட்டது.

அதே போல் இந்த படத்தில் டைரக்டர் விக்ரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜகுமாரன் என்பவரையே, தேவயானி, கடந்த 2001ல் காதல் திருமணம் செய்துக்கொண்டார். இனியா, பிரியங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

கோலங்கள் சீரியல்

தமிழ் சினிமாவில் நடித்தது மட்டுமின்றி டிவி சீரியலிலும் தேவயானி நடித்தார். இவரது நடிப்பில் கோலங்கள் சீரியல் பெரிய அளவில் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நடிகை தேவயானியின் சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இவருக்கு சென்னையில் ஒரு பிரமாண்டமான வீடும், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு ஒன்றும் உள்ளது.

பண்ணை வீட்டில்

இந்த பண்ணை வீட்டில் எப்போது வேண்டுமானாலும் மழை பெய்வது போன்ற ஒரு செட்டப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதிய நேரத்தில் வீட்டுக்குள் அதிக வெயில் இருந்தால், தண்ணீர் குழாய்களை திறந்துவிட்டு, மழை பெய்யும்படி செய்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

இப்படி பல கோடிகளில் புரளும் நடிகை தேவயானி தொடர்ந்து சினிமாவில், சீரியல்களில் நடித்து வருகிறார். அவரது கணவர் இயக்குநர் ராஜகுமாரன் படங்களை இயக்குவதில், ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஆர்வமாக இருந்து வருகிறார்.