Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Gossips Corner

கால் வச்ச இடமெல்லாம் கன்னி வெடி.. நம்பர் நடிகையை கட்டுன நேரமா.. புலம்பும் கடவுள் இயக்குனர்..!

என்னடா இது கால் வெச்ச இடம் எல்லாம் கன்னி வெடியா? எத செஞ்சாலும் சரியா வரமாட்டேங்குதே.. என்று புலம்பித் தள்ளக் கூடிய நிலையில் பிரபல கடவுள் இயக்குனர் தற்போது தவியாய் தவித்து வருகிறார்.

திருமணத்திற்கு முன்பு இது போன்ற நிலையை இந்த பிரபல கடவுள் இயக்குனர் சந்தித்ததே இல்லை என்று சொல்லலாம். ஆனால் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு திருமணத்தை அடுத்து தொடர்ந்து கஷ்ட காலமாகவே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

இவருக்கும் மட்டுமல்ல இவர் கட்டி வந்த நம்பர் நடிகைக்கும் அதே கஷ்டம் தான். எவ்வளவு தான் சிரமப்பட்டு நடித்தாலும் படம் சொல்லிக் கொள்ளும் படி ஓடுவதில்லை. புதிய பட வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை என்று தான் கூற வேண்டும்.

இதனை அடுத்து கோயில், குளம் என்று பல பக்கம் சென்று பலர் சொன்ன பரிகாரங்களை செய்தும் பிரச்சனை இன்னும் சரியாகவில்லை என்ற தவிப்பில் நம்பர் நடிகையும், இயக்குனரும் இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தால் சமீப காலமாக இருவருக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது. எப்படியாவது தன் கணவரை பெரிய இயக்குனராக மாற்ற வேண்டும் என்று நினைத்த நினைப்பு வெறும் நினைப்பாகவே போய் விட்டது.

--Advertisement--

நம்பி இருந்த டாப் நடிகரும் கணவரை வேண்டாம் என்று ஒதுக்கி விட எப்படியாவது ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் அந்த இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்.

தன் மனைவிக்கு போட்டியாக மற்றொரு நம்பர் நடிகை மாறி வரும் வேளையில் அதிலிருந்து எப்படியாவது மீண்டு தன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள வித்தியாசமான கதைகளை தேர்வு செய்தும் வெற்றி கிடைக்காமல் அப்செட்டில் மனைவியும் இருக்கிறார்.

எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற எண்ணத்தில் சோலோவாக நடித்த திரைப்படமும் ஓடாமல் நடிகைக்கு ஷாக் தந்து விட்டது. சரி கணவனின் கேரியரில் ஆவது கவனத்தை செலுத்தலாம் என்று கவனத்தை செலுத்தி வந்த அந்த நம்பர் நடிகை கணவருக்காக ஒரு படத்தை ஒரு வழியாக ஏற்படுத்திக் கொடுக்க அந்த படத்தின் டைட்டிலும் தற்போது காப்பி என்று கட்ட பஞ்சாயத்து கிளம்பி உள்ளது.

இதனை எடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் இருவரும் இவர்களுக்கு அதிக அளவு கண் திருஷ்டி இருப்பதால் தான் இப்படியெல்லாம் திருமணம் ஆனதை அடுத்து தொடர்ந்து நடந்து வருவதாக கோடம்பாக்கத்தில் தற்போது பேச்சுக்கள் எழந்துள்ளது.

எனவே சரியான முறையில் இந்த திருஷ்டியை நீங்கினால் மட்டும் இவர்கள் நினைத்தது போல திரையுலகில் ஜொலிக்க முடியும் என பலரும் பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Gossips Corner

Trending Now

To Top