“தமிழ் மற்றும் மலையாள சீரியல் நடிகை மீரா கிருஷ்ணா..!” – கூறிய பியூட்டி டிப்ஸ்..!
கோட்டயத்தை பூர்வீகமாகக் கொண்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீரா கிருஷ்ணா தமிழ் மற்றும் மலையாள சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் ஒரு பேட்டியில் தனது தோல் மற்றும் முடி பராமரிப்பு பற்றிய சில பியூட்டி டிப்ஸ் கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்தக் கட்டுரையில் இன்று மீரா கிருஷ்ணா தன் அழகை மேலும் அழகாக காட்ட என்ன செய்கிறார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
meera krishna beauty tipsமீரா கிருஷ்ணாவின் அழகுக்கு முக்கிய காரணமாக திகழ்வது கற்றாழை ஜெல் தான் .இதை மாய்ஸ்ராய்சராக அவர் பயன்படுத்தி வருகிறார். மேலும் பியூட்டி பார்லருக்கு செல்லக்கூடிய பழக்கமே அவருக்கு கிடையாது.இவர் வாரத்துக்கு மூன்று முறை தலைக்கு தேங்காய் எண்ணெயை வைத்து குளிக்க கூடிய பழக்கத்தை இன்று வரை கடைபிடிப்பதாக கூறுகிறார்.
மேலும் நடிகையாக இருப்பதால் கூந்தலை அடிக்கடி கலர், அயனிங், பண்ண வேண்டிய அவசியம் இருப்பதால் அதிகளவு முடி கொட்ட ஆரம்பித்தது. ஆனால் கொட்டிய இடத்தில் முடிகளை மீண்டும் அதே அளவு வளர்வதற்கு தேங்காய் எண்ணெயை தேய்த்துக் குளித்தது தான் பலன் அளித்தது என்று கூறுகிறார்.
மேலும் இவரின் முக அழகுக்கு கற்றாழை, பால், பப்பாளி, தக்காளி முல்தான்பட்டி போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்துவதால் தான் இன்று வரை முகத்தில் முகப்பரு இல்லாமல் சரும வறட்சியிலிருந்து நிவாரணம் கிடைத்துள்ளதாம்.
எனவே கூந்தல் வளர்ச்சிக்காக தேங்காய் எண்ணெயோடு, வெந்தயம், கருவேப்பிலை சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ, கொய்யா இலை இவற்றையெல்லாம் போட்டு தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி வைத்த பின் அதனை வடிகட்டி கூந்தலுக்கு பயன்படுத்துகிறார்.
--Advertisement--
எனவே நீங்களும் இது போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி உங்கள் கூந்தல் மட்டுமல்லாமல் சரும அழகை மேலும் மேருகேற்றிக் கொள்ள இவர் கூறிய எந்த பியூட்டி டிப்ஸ் ஐ பயன்படுத்தலாம்.