“உள்ளே விடும் முன்.. அங்கே இதை பண்ணுவாங்க..” நைட் பார்ட்டி ரகசியம் உடைத்த டிக்டாக் இலக்கியா..

டிக்டாக் இலக்கியா : டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தன்னுடைய மோசமான வீடியோ காட்சிகளை வெளியிட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் டிக்டாக் இலக்கியா.

தமிழ் சினிமாவில் வெளியான ஐட்டம் பாடல்களுக்கு டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் கவர்ச்சியாட்டம் போட்டு தன்னுடைய பிரம்மாண்டமான முன்னழகு குலுங்க குலுங்க ரசிகர்களின் கைப்பேசிக்குள் புகுந்து அவர்களுடைய நெஞ்சை உலுக்கியவர் நடிகை இலக்கியா.

டிக்டாக் இலக்கியா

தற்பொழுது சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நீ சுடத்தான் வந்தியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

நடிகை ஷகிலா பேட்டி எடுக்க.. டிக் டாக் இலக்கியா அதற்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். நடிகை ஷகீலா இந்த பேட்டியில் பல்வேறு கோக்குமாக்கான கேள்விகள் எழுப்பினார்.

--Advertisement--

ஷகிலா பேட்டி

குறிப்பாக உன்னுடைய முன்னழகு மட்டும் எப்படி இவ்வளவு பெரிதாக இருக்கிறது..? கை கால்கள் எல்லாம் சிறியதாக இருக்கிறது… இப்பொழுது என்னை எடுத்துக் கொள்.. என்னுடைய முன்னழகு பெரிதாக இருக்கிறது.. கை கால்கள் எல்லாம் அதற்கு ஏற்றார் போல் பெரிதாகவே இருக்கிறது.. ஆனால் உனக்கு கை கால்கள் எல்லாம் குட்டி குட்டியாக இருக்கிறது. ஆனால் முன்னழகு மட்டும் இப்படி பெரிதாக இருக்கிறது.

ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டாயா..? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இலக்கியா நான் எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை. என்னுடைய அம்மா… என்னுடைய பாட்டி.. என அனைவருக்கும் இப்படித்தான் இருந்தது. எனக்கும் இப்படி இருக்கிறது.

என்னுடைய சகோதரிகளுக்கும் இப்படித்தான் இருக்கிறது.. இது பின் வழியாக எங்களுடைய பரம்பரை பரம்பரையாக வந்தது தானே தவிர.. இதற்காக நான் எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து நடிகை ஷகீலா.. துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று இரவு நேர பார்ட்டிகளில் கவர்ச்சி ஆட்டம் போடுகிறாய் என்றெல்லாம் கூறுகிறார்களே.. அது உண்மையா..? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த இலக்கியா.. ஆம் உண்மைதான்.. துபாய் இரவு நேர பாட்டிகளில் நடனம் ஆடுவதற்கு நான் சென்று இருக்கிறேன். இதற்காக இரண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுப்பார்கள்.

உள்ளே விடும் முன்பு..

எனக்கு முன்பு எனக்கு தெரிந்த தோழிகள் அவர்களுடைய தோழிகள் என பலர் இப்படி இரவு நேர பாட்டுகளில் நடனமாடி சம்பாதித்து இருக்கிறார்கள். அவர்களின் துணையுடனும் அவர்களுடைய அனுபவத்தை பெற்றுக் கொண்டும் தான் நான் நான் அங்கு சென்றேன்.

நான் இங்கு இருக்கும் பொழுது என்னிடம் தெளிவாக கூறி விட்டார்கள். அங்கு சென்றதும் இரவு நேர விடுதிக்கு உள்ளே விடும் முன்பு.. முழு உடல் பரிசோதனை செய்வார்கள்.. குறிப்பாக நமக்கு எதுவும் பரவக்கூடிய நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகு தான் நம் அனுமதிப்பார்கள்.

இது வழக்கமாக அங்கு நடக்கக்கூடிய விஷயம் தான். இது நமக்கும் பாதுகாப்பு.. அங்கு வரக்கூடிய விருந்தினர்களுக்கும் பாதுகாப்பானது என கூறியிருக்கிறார் இலக்கியா.

மேலும் அங்கே பணியாற்ற நமக்கு விருப்பமில்லை என்றால் நாம் வாங்கி அட்வான்ஸ் செய்து கொடுத்து விட வேண்டும் அல்லது நாம் வாங்கிய அட்வான்ஸ் சம்பாதிக்கும் அளவுக்காவது அங்கே நடனமாடி விட்டு திரும்பி வர வேண்டும் என பேசி இருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

மற்றபடி அங்கு பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.