“இந்த அறிகுறிகள் உங்கள் வீட்டில் இருந்தா..!” – கட்டாயம் கண் திருஷ்டி தான்..!!

உங்கள் வீட்டில் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கண் திருஷ்டி என்பதை நீங்கள் கண்டுகொள்ளுங்கள். கண் திருஷ்டி இருந்தால் உங்கள் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு போன்றவை அடிக்கடி ஏற்படும்.

கண் திருஷ்டிக்கான அறிகுறிகள்

அந்நிய நபர்கள் வீட்டுக்கு வந்தபோது உங்கள் வீடு மற்றும் வீட்டில் இருக்கும் நபர்களை பார்த்து ஏதாவது வியக்கும் வண்ணம் பேசினால் அதுவே திருஷ்டியாக மாறிவிடும்.

இதனால் கணவன் மனைவி இடையே காரணமில்லாமல் சண்டை வருவது, சந்தேகங்கள் ஏற்படுவது, தொடர் சண்டைகள் இது போன்ற விஷயங்கள் கண் திருஷ்டியின் அடையாளம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 கண் திருஷ்டி இருந்தால் பகை உண்டாவதோடு மட்டுமல்லாமல் சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கு.ம் சாப்பிட பிடிக்காமல் போவது, மற்றவரிடம் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

கண் திருஷ்டியால் பெண்களின் உடல் சோர்வு அதிக அளவு ஏற்படும். உடல் சோர்வோடு மட்டுமல்லாமல் மனச்சோர்வும் தேவை இல்லாததை கற்பனை செய்வதும் பயப்படுதலும் நிகழும் அப்படி இருந்தால் அவர்களுக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

--Advertisement--

கண் திருஷ்டி காரணமாக எண்ணற்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே அதை தடுப்பதற்காக நீங்கள் தினமும் வீட்டிற்கு மட்டுமில்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கும் சுற்றி போடுவது மிகவும் நல்லது.

சூடம் சுற்றி வைப்பதோடு நின்றுவிடாமல் பூசணிக்காய் சுற்றுவது, எலுமிச்சை பழம் சுற்றுவது திரி சுற்றி போடுவதை நீங்கள் வழக்க படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக அம்மாவாசை நாட்களில் சுத்தி போட மறக்க வேண்டாம். இதனை நீங்கள் தொடர்ந்து செய்வதின் மூலம் திருஷ்டி விடுதலில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.

மேலும் கண் திருஷ்டி நீங்க கண் திருஷ்டி பிள்ளையாரை வழி விட்டு வருவது மிகவும் நல்லது. அத்தோடு இந்தப் பிள்ளையார் சிலையை உங்கள் வீட்டின் முன் பகுதியில் வைப்பது மூலம் அத்துனை திருஷ்டிகளும்  விலகிவிடும்.