Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

உருகி, உருகி காதலித்து நடிகையை கர்ப்பம் ஆக்கிய பிரபலம்..! விஜய் பட நடிகரின் கோர முகம்..!

சினிமா துறையை பொறுத்த வரை சட்டையை மாற்றுவது போல காதலையும் மாற்றி விடுவது சகஜமான ஒன்று. எனினும் பிரபலமான இயக்குனர் ஒருவர் இது மாதிரி விஷயத்தை செய்துள்ளது தற்போது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் பொது இடத்தில் மிக நல்ல பெயரை வாங்கிய இந்த இயக்குனரா? இது போன்ற சம்பவத்தை செய்திருக்கிறார் என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

இந்த இயக்குனர் திரையுலகில் இன்று மூத்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா உலக வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குனர்களில் ஒருவர் என்றும் கூறலாம்.

நடிகர் ரஜினிகாந்தை மாஸ் ஹீரோவாக சித்தரித்த இயக்குனர்களின் மத்தியில் இந்த இயக்குனர் தான் முள்ளும் மலரும் மற்றும் ஜானி போன்ற படங்களில் நடிக்க வைத்து அவரது நடிப்புத் திறமையை வெகுவாக வெளி உலகத்திற்கு தெரிய வைத்தார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் ஹீரோக்களில் முன்னிலையில் இருக்கும் விஜயின் தெறி படத்தில் வில்லனாக இந்த இயக்குனர் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

--Advertisement--

இவர் ரஜினிகாந்தை வைத்து உதிரிப்பூக்கள் என்ற உணர்வுபூர்வமான கதையை எடுத்திருந்தார். ஜானி படத்தை இயக்கும் போது அதில் ஸ்ரீதேவியோடு பயணிக்கும் ஒரு பெண் கேரக்டர் இருந்தது.

அந்த பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் பிரேமி இவர் 60 ஆண்டு காலமாக சினிமாவில் பல தரப்பட்ட கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார்.

ஜானி படத்தில் நடிக்கும் போது இயக்குனருக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. ஏற்கனவே திருமணம் ஆன மகேந்திரன் இந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தையை பெற்றிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல் காரணமாக இரண்டு குடும்பத்தையும் சமாளிக்க முடியாததால் நடிகை பிரேமியோடு ஏழு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து விட்டு அவரை விட்டு விலகி முதல் மனைவியோடு சேர்ந்து விட்டார்.

சமுதாயத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருக்கும் இந்த இயக்குனர் வேறு யாருமில்லை இயக்குனர் மகேந்திரன். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளி வந்த தெறி படத்தில் நடித்த பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

எனவே இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் தற்போது கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை அடுத்து ரசிகர்கள் யாரையும் எளிதில் நம்ப முடியாதது போல தான் ஒவ்வொரு சம்பவம் சினி உலகில் நடக்கிறது என்பதை சூசகமாக பேசி வருகிறார்கள்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top