ஒரே காரில் கமலும்.. சிம்ரனும்.. அப்புறம் கௌதமியே.. புயலை கிளப்பிய பிரபலம்..

நடிகர் கமலஹாசன் இதுவரை 233 படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயம் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்டப்படிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கொரோனாவிற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட படப்பிடிப்பு இன்னும் முடிந்த பாடில்லை.

இடையில் சில விபத்துக்கள் பொருளாதார பிரச்சனைகள் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிணக்கு உள்ளிட்ட காரணங்களினால் படத்தின் தயாரிப்பு பணிகள் தொய்வடைந்தன. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க : நான் வேணும்ன்னு அடம் பிடித்தார்.. பிரபலம் குறித்து மேடையிலேயே கூறிய நடிகை ஆண்ட்ரியா..!

இயக்குனர் சங்கர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் கமலஹாசன் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் என்ற திரைப்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நடிகர் கமலஹாசனுக்கு மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு வெற்றி படமாக அமைந்தது இயக்குனர் லோகேஷ் கனராஜ் இந்த படம் இளவட்டங்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், கமலஹாசன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சிலவற்றை பிரபல மருத்துவர் காந்தராஜ் அவர்கள் தன்னுடைய யூடியூப் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறியதாவது, கமலஹாசன் பார்க்காத புகழ் கிடையாது. பாடலாசிரியர் வைரமுத்து தசாவதாரம் படத்தில் ஆஸ்கார் உனக்கு தூரம் இல்லை என்ற எழுதியதற்கு ஏற்ப வெறித்தனமாக சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

கமலஹாசன், ஆனால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சர்ச்சைகளை கொண்டு இருக்கிறது. முக்கியமாக அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை இப்போதும் பலரும் விமர்சிக்கிறார்கள்.

இதையும் படிங்க : உடன் பிறந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. காரணம் தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..

தனிமனித ஒழுக்கம் இல்லாதவர் கமலஹாசன் என்று கூட விமர்சிக்கிறார்கள். நடிகைகள் ஸ்ரீவித்யா, வாணி கணபதி, சரிகா, கௌதமி என அவருடைய வாழ்க்கையில் மனைவியாக வந்து சென்ற பெண்கள் அதிகம், ஆனால் அவர் எதையுமே பொதுவெளியில் மறைத்தது கிடையாது மறுத்தது கிடையாது என்பதுதான் விஷயம், அதுதான் கமல்ஹாசன்.

இந்த லிஸ்டில் அவ்வப்போது நடிகை சிம்ரனின் பெயரும் அடிபடுவது வாடிக்கை. இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஒரு கட்டத்தில் நடிகர் கமலஹாசனும் சிம்ரனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள் என்று கூறப்பட்டது.

அவ்வப்போது சிம்ரன் படப்பிடிப்பு நடக்கும் தளங்களுக்கு நடிகர் கமல்ஹாசன் சென்று வருவது நடந்திருக்கிறது. அதேபோல நடிகை சிம்ரனும் கமலஹாசனின் படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து சென்றிருக்கிறார் என்று தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கமலஹாசன் சிம்ரன் உறவு குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார் மருத்துவர் காந்தராஜ்.

தொடர்ந்து பேசிய அவர் கமல்ஹாசன் எப்போதும் ஊருக்கு உபதேசம் செய்ததே கிடையாது. அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தவர் தான். ஆனால் அதனை அவர் எப்போதும் மறைத்தது கிடையாது. இது என்னுடைய லைப் ஸ்டைல் என்று நிரூபித்தவர்.

சமீபத்தில் நெய்வேலியில் நடிகர்கள் போராட்டம் நடத்திய போது ஒரே காரில் கமலஹாசன் சிம்ரன் வந்து இறங்கியது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதன் மூலம் நான் இப்போதும் சிம்ரனை நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவரும் என்னை நேசிக்கிறார் என்று உணர்த்தினார்.

சிம்ரனுக்கு பிறகு தான் கௌதமியே அவருடைய வாழ்வில் வந்தார் கௌதமியை பிறந்த பிறகு பெண்கள் விஷயத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார் நடிகர் கமலஹாசன். பொது வாழ்க்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருக்கிறார். இந்நிலையில் இவருடைய இந்த பேட்டியை திரைத்துறையில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.