சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

சதுரங்கவேட்டை நாயகியை நினைவிருக்கா.. கணவர் குழந்தைன்னு இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

தமிழில் சில படங்கள் மட்டுமே, மக்களுக்கு விழிப்புணர்வை தரும் நல்ல படங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் சதுரங்க வேட்டை.

ஈரோடு, கரூர் பகுதிகளில் நடந்த ஈமு கோழி விற்பனை, தமிழகத்தில் பல இடங்களில் நடந்த மண்ணுளி பாம்பு மோசடி, ரைஸ் புல்லிங் போன்ற முக்கிய விஷயங்களை இந்த படம் பேசியது.

இந்த படத்தில் நடித்த அனைவருமே, அவர்களது நடிப்பில் தங்களது தனித்துவத்தை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட சில நடிகர்களை தவிர மற்றவர்கள் அனைவருமே புதிய முகங்களாக தான் தெரிந்தனர்.

இஷாரா நாயர்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த படம் சதுரங்க வேட்டை. நட்டி (நடராஜ்) கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் இஷாரா நாயர், நாயகியாக நடித்திருந்தார்.

--Advertisement--

இளவரசு, திலகன், பாரதி கண்ணன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், மோசடி மன்னர்களை பற்றியது.

இதையும் படியுங்கள்: கூவத்தூர் திரிஷா சீரியஸ்.. சின்மயி உடைத்த ரகசியம்.. விவகாரம் பெருசா பெருசா இருக்கே..

மோசடி விஷயங்களை…

அதாவது மண்ணுளி பாம்பு, எம் எல் எம் கம்பெனி பொருட்கள் விற்பனை, பாதி விலைக்கு தங்கம் தருதல், ஈமு கோழி வளர்ப்பு, கோவில் கோபுர கலசம் ரைஸ் புல்லிங் போன்ற மோசடி விஷயங்களை மையமாக வைத்த எடுக்கப்பட்ட படம்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற வெற்றிப்படமாக இருந்தது. மோசடி குழுவில் தலைவனாக நட்டி நடித்திருந்த இந்த படத்தில், இஷாரா நாயா் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

வெண்மேகம் என்ற படத்தில்…

கடந்த 2014ம் ஆண்டில் வெளியான வெண்மேகம் என்ற படத்தில் அறிமுகமானவர் இஷாரா நாயர்.

இதே ஆண்டில் 3 படங்களில் அவர் நடித்தார். அதில் ஒன்றுதான் சதுரங்க வேட்டை. இந்த படத்தின் டைரக்டர் எச், வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2017ம் ஆண்டில் இஷாரா நாயர், இவன் யாரென்று தெரிகிறதா என்ற படத்திலும், 2021ம் ஆண்டில் எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்திலும் நடித்தார்.

குடும்ப வாழ்க்கையில்…

ஆனால் சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியாததால், ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி, குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார் இஷாரா நாயர்.

இதையும் படியுங்கள்: இரண்டு முறை திருமணம் செய்த சீரியல் நடிகைகள்.. அடேங்கப்பா.. இவங்களுமா..?

கடந்த 2018ம் ஆண்டில் துபாய் வாழ் தமிழரான சஹில் என்பவரை இஷாரா நாயர் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகு துபாயிலேயே செட்டில் ஆகி விட்ட இஷாரா நாயருக்கு ஆண் குழந்தை உள்ளது.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் இஷாரா நாயரின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.