Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“செல்வத்தை அள்ளித்தரும் குபேர பூஜை..!” – இப்படி செய்யுங்க..!!

யாராக இருந்தாலும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதில் இருப்பதோடு மட்டுமல்லாமல் செல்வ சீமானாக திகழ்வதற்காக பல வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

எனினும் சில சமயம் இவர்கள் சம்பாதிக்க கூடிய பணம் கையில் தங்காமல் வீண் விரயமாகிக் கொண்டே இருக்கும். இதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் இருக்கக்கூடிய இவர்கள் அந்த பணம் மிச்சம் ஆவதற்கும், மேலும் ஐஸ்வரியம் இல்லத்தில் அதிகரிக்க குபேர வழிபாடு செய்தால் போதுமானது. அப்படிப்பட்ட குபேர வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இப்போது நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

குபேர பூஜை செய்யும் விதம்

எல்லாவிதமான செல்வங்களுக்கும் தலைவராக இருக்கக்கூடிய குபேருக்கு செய்யக்கூடிய பூஜை தான் குபேர பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையை வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்குள் முடிக்க வேண்டும்.

குபேர நேரமான இந்த நேரத்தில் நீங்கள் செல்வத்துக்கே உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட பணம் வந்து சேரும் .ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் மிக அதிக அளவு உங்கள் வீட்டில் புழங்குவதோடு மட்டுமல்லாமல் பண சேமிப்பும் அதிகரிக்கும்.

மேலும் குபேர காலத்தில் நீங்கள் கனகதாரா ஸ்தோத்திரம் படிக்க பண மழையே உங்கள் வீட்டில் கொட்டும் என்றால் அது மிகையல்ல. குபேர பூஜையின் போது நீங்கள் சின்ன சின்ன கிண்ணங்களில் அரிசி, உப்பு, மிளகாய், புளி, பருப்பு, கடுகு போன்ற அனைத்து விதமான பொருட்களையும் வரிசையாக வைத்து பூஜை செய்து ஆராதனை செய்து எடுக்க வேண்டும். அப்படி செய்யும் போது உங்கள் வீட்டில் அது போன்ற பொருட்களுக்கு குறை இல்லாமல் வளர்ந்து கொண்டே வரும்.

--Advertisement--

எனவே அவசியம் குபேர காலத்தில் நீங்கள் மகாலட்சுமிக்கு பூஜை செய்தால் சகல சம்பத்தையும் பெறுவீர்கள். எனவே மறவாமல் 24 வாரம் கட்டாயம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் இந்த நேரத்தில் நீங்கள் மகாலட்சுமியும் குபேரனையும் வழிபட்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top