Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

2வது மனைவியுடன் கணவர்..! Sandy’யின் முதல் மனைவி கொடுத்த பரிசை பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடன கலைஞரான சாண்டி மாஸ்டர் முதன் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடன இயக்குனராக தனது வாழ்க்கை பணியை தொடங்கினார்.

அந்த நிகழ்ச்சியிலே இவர் தனது திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடன கலைஞராக பார்க்கப்பட்டார்.

சாண்டி மாஸ்டர்:

அதை தொடர்ந்து விஜய் தொலைபேசியில் ஒளிபரப்பான கிங்ஸ் ஆப் டான்ஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு நடுவராக மாறினார்.

தொடர்ந்து அவருக்கு சின்னத்திரையிலிருந்து நடன இயக்குனராக வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சாண்டிக்கு திரைப்பட வாய்ப்புகள் மளமளவென வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

--Advertisement--

இதனால் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களுக்கு நடன கலைஞராக இவர் பணியாற்றி இருக்கிறார்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கூட இவர் நடனங்களை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடன இயக்குனராக சிறந்த நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் சாண்டிக்கு மிகப்பெரிய பிரபலமும் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது.

இதனிடையே அவர் பிக் பாஸ் சீசன் சீசன் 3 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய காமெடி என்டர்டைனராக பார்க்கப்பட்டார்.

பிக்பாஸில் சாண்டியின் அலப்பறை:

இந்த நிகழ்ச்சியில் கலகலப்பான காமெடி, டைமிங் காமெடி பலரை கலாய்ப்பது என ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் சாண்டி மாஸ்டர்.

சாண்டி மட்டும் இந்த வீட்டில் இல்லை என்றால் பிக் பாஸே போரடிக்கும் என ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாக தனது பணியை செய்து விட்டு வெளியேறினார்.

குறிப்பாக அதில் கவின் லாஸ்லயா மற்றும் தர்ஷன் இவர்களுடன் அவர் நண்பராக கேங் ஆக இருந்துக்கொண்டு அரட்டையடித்து சிறந்த காமெடியாக பார்க்கப்பட்டது.

முதல் மனைவியுடன் லிவிங் லைஃப்:

முன்னதாக சாண்டி மாஸ்டர் காஜல் பசுபதி என்ற ஆங்கரை திருமணம் செய்யாமலே பல வருடங்களாக லிவிங் லைப் அவருடன் வாழ்ந்து வந்தார்.

பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்ட போதும் அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு சாண்டி இரண்டாவது தாரமாக சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம்:

இவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. மற்றும் மனைவியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

குறிப்பாக சாண்டியின் மகளை கமல்ஹாசன் தூக்கி கொஞ்சிய வீடியோ, போட்டோக்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்த நிலையில் தனது முதல் மாணவியான காதல் பசுபதிக்கு சாண்டி கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

முதல் மனைவி கொடுத்த பரிசு:

ஆம் தனது மகளின் பிறந்தநாளுக்கு முன்னாள் மனைவியான காஜல் பசுபதியை வீட்டிற்கு அழைத்து தனது மகளை வாழ்த்தும்படி கூறியிருக்கிறார்.

சாண்டியின் இந்த பெருந்தன்மையான மனதை பலரும் பாராட்டு தள்ளியுள்ளனர். விவாகரத்து செய்துவிட்டால் ஒருவரை ஒருவர் எதிரிகளாக பார்த்துக்கொண்டு பொறாமை வாழும் இந்த உலகத்தில் இப்படியும் ஒரு மனிதரா? என சாண்டியை பலரும் வியந்து பாராட்டியுள்ளனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top