ஒரு இரவுக்கு 13 லட்சம்.. கணவர் இறந்த பிறகு.. ரூட்டை மாற்றிய நடிகை மீனா..! – ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை மீனா. இடையில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு குடும்பம் குழந்தை என செட்டிலாகி இருந்த நடிகை மீனா தன்னுடைய குழந்தையையும் சினிமாவில் நடிக்க வைத்தார். நடிகர் விஜய் நடிப்பில் உருவான தெறி திரைப்படத்தில் நடிகர் விஜயின் மகளாக அறிமுகமானார் நடிகை மீனாவின் மகள் நைனிகா.

திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நைனிகா. இந்நிலையில், நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இடியாக இறங்கிய கனவைர்ன் மறைவு நடிகை மீனாவை நிலை குலைய செய்தது. கணவரின் மறைவிற்க்கு பிறகு நடிகை மீனாவிடம் எத்தனையோ பேர் பேட்டி எடுக்க முயற்சி செய்தும் நடக்கவில்லை.

மீனாவை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்க போதெல்லாம், மேடம் தற்போது மிகவும் சோகமாக இருக்கிறார்கள். அவருடைய கணவர் இருந்த துக்கத்திலிருந்து அவர் வெளியில் வர சில வருடங்கள் ஆகும். அதுவரை இந்த பேட்டி போன்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாம் என்று கூறி பத்திரிக்கையாளரை அனுப்பி விடுகிறார் மீனாவின் உதவியாளர்.

---- Advertisement ----

ஆனால், ஒரு இரவுக்கு.. இன்னும் சொல்லப்போனால் வெறும் இரண்டு மணி நேரத்திற்கு 13 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்றதும் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு ஓகே சொல்லி இருக்கிறார் நடிகை மீனா.

முன்பெல்லாம் நடிகர் நடிகைகளிடம் பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டால் நாளை காலை வருகிறோம்.. நாளை மாலை வருகிறோம்.. படப்பிடிப்பு இந்த இடத்தில் தான் நடக்கிறது.. இங்கே வந்துவிட்டால் எளிமையாக இருக்கும்.. இங்கே வந்து விடுங்களேன்.. என்று உடனே அழைப்பார்கள்.

பத்திரிகையாளர்களுக்கு நடிகர் நடிகைகள் அவ்வளவு மரியாதை கொடுப்பார்கள். ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. இப்போது எல்லாம் பேட்டி என்று கேட்டுச் சென்றாள் எவ்வளவு பணம் கொடுப்பீர்கள்..? என்ற கேள்வி தான் முதலில் கேட்கப்படுகிறது.

இப்போது தான் சினிமா வாழ்க்கையை ஆரம்பிக்கக்கூடிய நடிகையாக இருந்தாலும் சரி.. அல்லது முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி.. நடிகராக இருந்தாலும் சரி.. பணத்தை வைத்தால் தான் பேட்டிக்கு வருவோம் என்று கூறுகிறார்கள்.

அதையும் தாண்டி பேட்டி கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுடைய படங்களின் ப்ரோமோஷனுக்காக மட்டுமே இருக்குமே தவிர.. மற்றபடி தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்கள் நடிகரையோ நடிகையோ பேட்டி எடுக்க வேண்டும் என்றால் பணம் கேட்கிறார்கள்.

ஏனென்றால் தற்போது கேமரா கையில் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஒரு ஊடகவியலாளர் ஆகி விடுகிறார்கள்.. ஆளாளுக்கு ஒரு youtube சேனல் நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.. இப்படி போட்டி இருக்கும் இடத்தில் நடிகைகளும் பிரபலங்களும் காசு பார்த்துக் கொள்கிறார்கள்.. அவர்கள் சொல்லியும் எந்த தப்பும் இல்லை.

நடிகை மீனாவை பத்திரிகையாளர்கள் பலமுறை பேட்டி எடுக்க நுகியும் சில நிமிடங்கள் கூட இதற்காக ஒதுக்க முடியாத நடிகை மீனா தன்னைப் பற்றியும் தனக்கு தன்னுடைய 40 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாகவும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது என்றதும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் முடியாது என மறுத்த நடிகை மீனா வரி நீங்களாக 13 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கிறோம் என்று கூறியதும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

---- Advertisement ----