எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!

எனக்கு தம் அடிக்க சொல்லி குடுத்ததே இவரு தான்.. வீட்டு மொட்டை மாடியில்.. மீரா கிருஷ்ணன் பகீர் தகவல்..!

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக விளங்கிய மீரா கிருஷ்ணன் மிகச்சிறந்த பாடும் திறனை பெற்ற பாடகி என்று சொல்லலாம். இதனை அடுத்து இவர் சன் தொலைக்காட்சியின் சீரியல்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் ஒரு குறிப்பிட்ட குணசித்திர நடிகையாக இவர் வலம் வந்திருக்கிறார். அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு வசீகரா என்ற திரைப்படத்தில் இவர் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


நடிகை மீரா கிருஷ்ணன்..

இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவரை தேடி வந்தது. அந்த வகையில் அதே ஆண்டு குறும்பு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2004-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்திலும் நடித்து அசத்தினார்.

இதையும் படிங்க: கண்ணாடி போல டாப்ஸ்.. அது அப்பட்டமாக தெரிய ரம்யா கிருஷ்ணன்.. இளசுகளை கட்டி இழுக்கும் ஹாட் போஸ்..!

மேலும் அதே ஆண்டு ரைட்டா தப்பா திரைப்படத்தில் நடித்த இவர் 2005-ஆம் ஆண்டு இதய திருடன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஒரு நீண்ட கேப்பை எடுத்துக் கொண்ட இவர் 2011-ஆம் ஆண்டு சிறுத்தை படத்தில் 2012-ஆம் ஆண்டு சகுனி படத்திலும் 2013-ஆம் ஆண்டு சொன்னா புரியாது, நையாண்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

--Advertisement--


பல்வேறு வகையான பக்தி பாடல்களை பாடி இருக்கும் இவர் பல ஆல்பங்களில் தனது அற்புத குரல் வளத்தை வெளிப்படுத்து இருப்பார். அதோடு பல ஐயப்பன் பக்தி பாடல்களில் வீணை வாசித்து இருப்பது பலருக்கும் தெரியாது.

வீட்டு மொட்டை மாடியில் தம் அடித்தாரா..

இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்று மீரா கிருஷ்ணன் பேசும் பொழுது தனக்கு தம் அடிக்க கற்றுக் கொடுக்க முக்கிய காரணமாக இருந்தவர் என் கணவர் என்ற குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மகிழ் திருமேனி இயக்கும் படம் என்பதால் அவர் என்னிடம் தம் அடிப்பதனால் உங்களுக்கு இந்த படம் பிளஸ் ஆகவும் இருக்கலாம் இல்லையென்றால் மைனஸ் ஆகவும் மாறலாம் என சொல்லி இருந்தார்.


இன்னும் அந்தப் படத்திற்கு அந்தக் கதைக்கு இது போன்ற ஒரு காட்சி என்பதால் நான் அதை ஏற்றுக் கொண்டதோடு தம் அடிக்க பயிற்சிகளை மேற்கொண்டேன்.ஆரம்பத்தில் எனக்கு மென்தல் சிகரெட் போன்றவற்றை கொடுத்து பயிற்சியை தந்தார்கள்.

இந்த வகையில் ஒரு ஆண் எப்படி தம் அடித்து புகையை வெளியே விடுவார்களோ அது போல எனக்கு ஆபீஸில் கற்றுக் கொடுத்தார்கள்.

அட.. அத கற்றுக் கொடுத்ததே இவர் கணவரா?

இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியை அதிகரிக்க வீட்டிற்கும் நான்கு, ஐந்து மென்தால் சிகரெட்டுகளை கொடுத்து அனுப்பினார்கள். இதை தொடர்ந்து வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து தம்மடிக்கும் பயிற்சியை மேற்கொண்டேன்.

எனது கணவருக்கும் தம் அடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவர் என்னை விட அந்த சிகரட்டை பிடித்து புகையை வெளியே தள்ளும் போது அதிக அளவு இருமினார். அப்போது அவரைப் பார்க்கும் போது நான் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

இதையும் படிங்க: கணவரை பிரிய உண்மையான காரணம் இது தான்.. ரச்சிதா மகாலட்சுமி குறித்து வெளியான ரகசியம்..!


குழந்தைகளுக்குத் தெரியாமல் நாங்கள் இந்த வேலையை பார்த்தோம் என அவரது கணவரும் கூறிய நிலையில், ஒரு வேளை இதனைப் பார்த்து குழந்தைகள் கிண்டல் செய்யலாம் அல்லது நம்மை பார்த்து கற்றுக் கொள்ளலாம் என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது என்று கூறினார்.

படத்தில் தம் அடிக்கும் காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக பல்வேறு வகைகளில் தம் அடிக்க மொட்டை மாடியில் முயற்சி செய்தோம் என்ற விஷயத்தை ஓபன் ஆக நடிகை மீரா கிருஷ்ணன் சொன்னதை அடுத்து ரசிகர்கள் இதனை பரபரப்பான பேச்சாக மாற்றி விட்டார்கள்.

மேலும் மீரா கிருஷ்ணனுக்கு தம் அடிக்க கற்றுக் கொடுத்ததே அவரது கணவர் தான் அதுவும் மொட்டை மாடியில் இருவரும் சேர்ந்து அடித்தார்கள் என்ற பகீர் தகவல் தற்போது இணையங்களில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.