எனக்கும் அது தேவை.. 49 வயசில் நக்மாவுக்கு வந்த ஆசையை பாருங்க..! – உச் கொட்டும் ரசிகர்கள்..!

நடிகை நக்மா கடந்த 1995 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா என்ற எவர்களின் ஹிட் திரைப்படம் அதில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றி படங்களை கொடுத்திருக்கும் நடிகை நக்மா தற்பொழுது 49 வயது ஆகும் நிலையில் எனக்கும் அது தேவை.. எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.. என்று உணவுபூர்வமாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

இதனை கேட்டு ரசிகர்கள் உச் கொட்டி வருகின்றனர். கடந்த 1990 ஆம் ஆண்டு இந்தி மொழியில் வெளியான பாஹி என்ற திரைப்படத்தின் ஹீரோயினாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நக்மா.

அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்தார். ஆனால், இவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது 1994 ஆம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான காதலன் திரைப்படம் தான்.

இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு பாட்ஷா திரைப்படத்தில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார் நடிகை நக்மா.

தற்போது 49 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவர்களுடைய தங்கைகளான ரோஷினி மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகள் என திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டனர்.

இந்நிலையில், சமீபத்தில் தன்னுடைய திருமண ஆசை குறித்து உணர்வுபூர்வமாக பேசி இருக்கிறார் நடிகை நக்மா. எனக்கு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமெல்லாம் கிடையாது.

எனக்கும் ஒரு துணை தேவை.. குழந்தைகளோடு வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.. திருமணத்தின் மூலம் ஒரு குடும்பம் உருவாகிறது.. என் திருமணம் விரைவில் நடக்குமா..? என்ற எனக்கு தெரியவில்லை.

ஆனால் திருமணம் செய்து கொண்டால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். மகிழ்ச்சி என்பது வாழ்க்கையில் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டும் இருப்பது அல்ல என கூறியிருக்கிறார்.

நடிகர் சரத்குமார், கிரிக்கெட் வீரர் கங்குலி, ஹிந்தி நடிகர் மனோஜ் திவாரி, ரவி கிருஷ்ணன் ஆகியோரோடு காதல் கிசுகிசுவில் சிக்கியவர் நக்மா என்பது குறிப்பிடத்தக்கது.

49 வயதாகும் நிலையில் திருமணம் செய்து கொள்ள ஆசை வந்திருக்கிறது என நடிகை நக்மா கூறியிருப்பது ரசிகர்களை உச் கொட்ட வைத்திருக்கிறது.