யார் மகன் நடிகராகியுள்ளார் தெரியுமா..? பாருங்க.. அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே..!

இப்போதெல்லாம் வாரிசு நடிகர்கள் சினிமாவில் நடிப்பது என்பது மிக மிக சாதாரணமாகி விட்டது.

நடிகர்கள், நடிகைகளின் மகன்கள், மகள்கள் என்றாலே திரையுலக வாரிசுகளாக சினிமாவில் நடிக்க வந்து விடுகின்றனர்.

இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், இசையமைப்பாளர் போன்றவர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடித்து வந்துவிடுகின்றனர். அதே போல் சினிமாத்துறை சார்ந்தவர்களின் நெருங்கிய உறவுகளின் வாரிசுகளும், புதுமுகங்களாக களத்தில் இறங்கி விடுகின்றனர்.

தமிழ் சினிமாவில் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் சத்யராஜ், பிரபு, கார்த்திக், சிவக்குமார், சரத்குமார் போன்ற பலரது வாரிசுகள் இன்று தமிழ் சினிமாவில் இருக்கின்றனர்.

அந்த வரிசையில் இப்போது காமெடி நடிகர் செந்தில் மகனும் நடிக்க வந்து விட்டார்.

--Advertisement--

காமெடி நடிகர் செந்தில்

நடிகர் செந்தில், தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். குறிப்பாக கவுண்டமணி – செந்தில் காமெடி என்றாலே, அது வேற லெவல் தான்.

கவுண்டமணியுடன்…

கடந்த 1980 முதல் 2000ம் ஆண்டு வரை கவுண்டமணி – செந்தில் இருவரும் செய்த காமெடிகள் தமிழ் சினிமாவின் வரலாறாக இருக்கிறது. அதன்பிறகு பலரும் காமெடி நடிப்பில் ஜொலித்தாலும் கவுண்டமணி – செந்தில் காமெடி என்பது தனி ரகம்தான். எப்போதும் கவுண்டமணி – செந்தில் காமெடியை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

தடை உடை படத்தில்…

இப்போது பாபி சிம்ஹா நடித்து வரும் படம் தடை உடை. இந்த படத்தில் நடிகர் செந்தில் அப்பாவாகவும், நடிகர் செந்திலின் மகன் மணிகண்ட பிரபு மகனாகவும் நடிக்கின்றனர்.

அதாவது நிஜத்திலும் தந்தை மகனாக இருப்பவர்கள், இந்த படத்தில் அப்பா மகன் கேரக்டர்களிலேயே நடிக்கின்றனர்.

மணிகண்ட பிரபு

இந்த படத்தை புதுமுக இயக்குனர் ராகேஷ் டைரக்சன் செய்கிறார். செந்தில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அவரது மகன் மணிகண்ட பிரபுவுக்கு இது முதல் படம், அறிமுக படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் பிரபு, ரோகிணி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். நடிகர் பாபி சிம்ஹாவின் மனைவி ஜெயஸ்ரீதான் இந்த படத்தை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தடை உடை படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிந்து விட்டது. மிக விரைவில் படம் ரிலீஸ் ஆகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

ரீல் அப்பா – மகனாக

இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட செந்தில் – மணிகண்ட பிரபு புகைப்படத்தை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட நடிகர் பாபி சிம்ஹா, நிஜத்தில் அப்பாவும் மகனும், இந்த படத்தில் ரீல் அப்பா மகனாக நடிக்கின்றனர் என்று அந்த புகைப்படத்துக்கு பாபி சிம்ஹா கமெண்ட் போட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. ஆக நடிகர் செந்தில் மகனும் சினிமா வாரிசாக கலைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா போலவே இருக்காரே…

இந்த புகைப்படங்களை பார்க்கும் பலரும், நடிகர் செந்தில் மகன் நடிகராகி விட்டாரா, அச்சு அசல் அப்பா போலவே இருக்காரே என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.