ஐயா படத்தில் ஹரியை மிரள வைத்த நயன்தாரா.. என்ன வேலை பார்த்துள்ளார் பாருங்க..!

நடிகை நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நயன்தாரா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 75 படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் கடைசியாக நடித்து வெளியான படம் அன்னபூரணி. இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டும்தான். திரிஷா அதிக சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டாலும், அவர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரியாது.

ஆனால் நயன்தாரா ரூ.10 கோடி முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

நயன்தாரா தமிழ் படங்களில் நடித்தது மட்டும் இன்றி, இயக்குனர் அட்லி இயக்கத்தில், இந்தியில் ஜவான் என்ற படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

--Advertisement--

இந்த படத்தை தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலி என்ற படத்தில் அவர் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

ஐயா படத்தில் அறிமுகம்

மலையாளத்தில் நடித்த பிறகு, நயன்தாரா தமிழில் அறிமுகமான முதல் படம் ஐயா தான். இந்த படத்தில்தான் நயன்தாரா அறிமுகமானார். ஹீரோவாக சரத்குமார் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்நிலையில் ஐயா படத்தில் நயன்தாரா நடித்த போது நடந்த சில விஷயங்களை படத்தின் இயக்குனர் ஹரி சமீபத்தில் பேசியிருக்கிறார்.

இயக்குனர் ஹரி

அவர் கூறியதாவது, ஐயா படத்தில் பிளஸ் 2 மாணவியாக நயன்தாரா நடித்திருப்பார். இந்த படத்தில் நடிக்கும் போது எப்போதுமே செமையான கோபத்தில்தான் நயன்தாரா இருப்பார். இப்பவே இந்த பொண்ணு இவ்வளவு கோபமா இருக்கிறதே, என்று அப்போதே எனக்கு தோன்றியது.

நினைத்து பார்க்கவில்லை

இருந்தாலும் நிச்சயமாக இந்த பெண், பின்னால் பெரிய நடிகையாக வருவார் என்று நினைத்தேன். ஆனால் இவ்வளவு பெரிய இடத்தை நயன்தாரா அடைவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை.

காஸ்ட்யூம் விஷயத்தில்

முதல் படத்திலேயே காஸ்ட்யூம் விஷயத்தில் என்னிடம் கோபமாக முறையிடுவார். இந்த கோபம் எல்லாம் வேலை நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக தான். அதனால்தான் அவர் இப்போது உச்சத்தில் இருக்கிறார் என்று டைரக்டர் ஹரி, நயன்தாராவை பாராட்டியுள்ளார்.

ஐயா படத்தில் நடித்த போது, இயக்குனர் ஹரியை அடிக்கடி கோபப்பட்டு மிரள வைத்திருக்கிறார் நயன்தாரா என்ற தகவலை அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.