Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

காதலனின் விந்தணுவை எடுத்து.. திருமணத்திற்கு முன்பே.. நயன்தாரா செய்த வேலை..! ரகசியம் உடைத்த நடிகர்..!

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் காதலில் இருந்தார். ஆனால், நடிகர்களுடனான காதல் எதுவும் நடிகை நயன்தாராவிற்கு கை கொடுக்கவில்லை.

கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருடைய திருமணம் மாமல்லபுரம் பகுதியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த 6 மாதத்தில் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தைக்கு தாயானார் நடிகை நயன்தாரா.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எந்த அளவுக்கு என்றால் தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் தானாக முன்வந்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு இந்த விவகாரம் பெரிதானது.

சொல்லப்போனால் நடிகை நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ தான் இந்த பிரச்சனைக்கு தங்களுடைய பதிலை அறிக்கை மூலமாகவோ அல்லது மீடியாவிலோ கூறியிருக்க வேண்டும்.

--Advertisement--

ஆனால் விஷயம் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சம்பந்த்தப்பட்டது இல்லையா..? அதனால், தமிழக அரசே இறங்கி வந்து பதில் கொடுத்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு பின் ஒரு தனிப்பட்ட நபரின் பிரச்சினையை அரசாங்கம் தன்னுடைய பிரச்சனையாக கருதி அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன..? என்று பலராலும் விமர்சனம் செய்யப்பட்டது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க.. நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று அவருடைய திருமணத்திற்கு முன்பே கூறியவர் பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்.

அந்த நேரத்தில் பயில்வான் ரங்கநாதனை பலரும் விமர்சித்தனர். நடிகை நயன்தாரா இன்னும் திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்குள்ள அவர் வாடகைத்தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் என்று நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள்.

உங்களுக்கு எப்படி தெரியும்.. நயன்தாரவுக்கே தெரியாத ஒரு விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்.. என்றெல்லாம் பயில்வான் ரங்கநாதனை மோசமாக திட்டி கருத்துகளை பதிவிட்டனர்.

ஆனால், இதற்கெல்லாம் பயில்வான் ரங்கநாதன் பதில் அளிக்கவே இல்லை. மாறாத நடிகை நயன்தாராவை தன்னுடைய செயல் மூலமாக பதில் அளித்து இருந்தார்.

நடிகை நயன்தாரா வாடகை மூலம் குழந்தைக்கு தாயானார் என்ற செய்தி அறிந்ததும் பலரும் பயில்வான் ரங்கநாதனை நோக்கி ஸ்மூத்தாக தங்களுடைய தலையை திருப்பினார்கள். இவர் ஒரு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விஷயத்தை கூறிவிட்டார்.

அதேபோல நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்..! எப்படி இந்த விஷயம் இவருக்கு தெரியும் என்று அவரிடமே சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறியதாவது, நடிகை நயன்தாரா வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கிறார் என்ற தகவல் கேரளாவில் பிரபல பத்திரிகை ஒன்றில் செய்தி துணுக்கு போல வெளியாகி இருந்தது.

அதனை நான் படித்தேன். நான் கூறக்கூடிய அனைத்து தகவல்களும் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் மட்டும் தான். இல்லையென்றால், குறிப்பிட்ட நடிகர் நடிகைகளே அவர்களுடைய வாயால் அவர்களைப் பற்றி கூறிய தகவல் தான்.

நான் கதையை புனைந்தோ அல்லது பொய்யான ஒரு விஷயத்தையோ கூறுவது கிடையாது. நான் பேசும் தொணியில்.. நான் விஷயத்தை பேசக்கூடிய விதத்தில் சிலருக்கு மாறுபட்ட கருத்து இருக்கும்

அப்படி பேசினால் தான் என்னுடைய ரசிகர்கள் என்னை ரசிப்பார்கள். என்னுடைய செய்தியை கேட்க விரும்பக் கூடிய ரசிகர்கள் கேட்பார்கள். சிலருக்கு மட்டும் நான் பேசும் விதம் பிடிக்கவில்லை என்பதற்காக நான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது.

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு முன்பே தன்னுடைய நண்பராக இருந்த விக்னேஷ் சிவனின் விந்தணுவை எடுத்து முறையாக வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

அப்படி செய்த முயற்சியில் வாடகை தாய் கர்ப்பமான பிறகு தான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ளவே முடிவு செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்க மாட்டார்களோ…? என்று கூட நயன்தாரா யோசித்து இருக்கலாம். அதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

அதனால் திருமணத்திற்கு முன்பே தன்னுடைய முக்கியமான ஒரு விஷயத்தை நயன்தாரா முடித்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆறே மாதத்தில் குழந்தையும் அவருக்கு கிடைத்துவிட்டது.

தற்பொழுது கணவன் மனைவி சகிதமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். வாடகை தாய் மூலம் குழந்தை என்பதெல்லாம் அனைத்து நாடுகளிலும் சாதாரணமாக நடைமுறையாக இருக்கிறது. பிரபலம் என்பதால் இந்த விஷயம் வெளியே தெரிகிறது.

நடிகை நயன்தாரா ஊரறிய திருமணம் செய்து கொண்டது ஒரு நாள் என்றாலும் கூட.. அவர் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பதிவு திருமணம் செய்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.

அது அவருடைய தனிப்பட்ட விஷயம் அதில் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது எனக் கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் ஆகி வருகின்றது,

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top