அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை..? ECR ரோடு.. பண்ணை வீடு.. வடிவேலு ரைடு.. போட்டு உடைத்த நடிகர்..!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவின் எழுச்சி பலருக்கும் தெரியும். ஆனால், அவருடைய வீழ்ச்சி சில பேருக்கு தான் தெரியும்.

இவருக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சட்டமன்ற தேர்தல் ஒன்றில் நடிகர் விஜயகாந்துக்கு எதிராக சகட்டுமேனிக்கு இவர் பேசியதும், ஆனால். இவர் எந்த கட்சிக்கு ஆதரவாக பேசினாரோ அந்த கட்சி எதிர்க்கட்சியாக கூட ஆகா முடியாமல் காணாமல் போனதும்.. இவர் பிரச்சாரத்தின் போது மோசமாக விமர்சித்து வந்த கட்சி ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும்.. வடிவேலுக்கு அடிமேல் அடியாக அமைந்தது.

இதனால் தான் இவருடைய பட வாய்ப்புகள் பறிபோய் விட்டது. தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் வடிவேலுவை ஒதுக்க தொடங்கினார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் உண்மை அது கிடையாது. வடிவேலுவுடன் நடித்த சக நடிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்று இணைய பக்கங்களில் நீங்கள் தேடினால் உண்மை என்ன என்று உங்களுக்கு புலப்படும்.

திரைப்படங்களில் காமெடியனாக ரசிகர்களை சிரிக்க வைக்கும் நடிகர் வடிவேலுவா இப்படி நிஜ வாழ்க்கையில் மோசமானவராக இருக்கிறார் என்று நீங்களே வியந்து போவீர்கள். இங்கு வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த.. அவருடன் பழகிய நடிகர்களே மோசமான கருத்துக்களை கூறுகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வடிவேலுவின் லீலைகள் குறித்து அவருடைய பண்ணை வீட்டில் நடிகைகளை அழைத்துச் சென்று விடிய விடிய இருந்து விட்டு விடிந்த பிறகு அனுப்பி வைக்கும் பழக்கம் குறித்தும் பேசி இருக்கிறார்.

நடிகர் வடிவேலு தன்னுடைய பதின்ம வயதில் நடிகை அம்பிகா உடைய மிக தீவிர ரசிகராக இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் நடிகர் வடிவேலு காமெடி நடிகராக சினிமாவில் கலக்கி கொண்டிருந்த பொழுது நடிகை அம்பிகா ஃபீல்ட் அவுட் ஆகி இருந்தார்.

அந்த நேரத்தில் நடிகை அம்பிகாவுக்கு பட வாய்ப்பு கொடுப்பதாக அழைத்து அவரை தன்னுடைய பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று விடிய விடிய டிஸ்கஷன் நடந்தியிருக்கிறார்.

இது எல்லாம் தாண்டி.. அம்பிகாவிற்கு கோடி கணக்கில் பணம் மற்றும் சொகுசு பங்களா ஆகியவற்றையும் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறுப்பட்டது.

ஒரு கட்டத்தில் எனக்கு இந்த நடிகை தான் ஹீரோயினாக வேண்டும் என்று தயாரிப்பாளர்களை அதட்டி கேட்கும் அளவுக்கு வளர்ந்தார் நடிகர் வடிவேலு. நடிகைகள் சதா, ஸ்ரேயா கவர்ச்சி நடிகை சோனா, சொர்ணா மேத்யூஸ், கும்தாஜ், மும்தாஜ், மோனிகா இப்படி பல்வேறு நடிகைகளை தன்னுடைய சிபாரிசின் பேரில் தீவிரமாக நடந்த டிஸ்கஷன் அதற்கு பிறகு வாய்ப்பு வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதைவிட கூத்து என்னவென்றால் சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் டிஸ்கஷன் செய்யலாம் என்று தயாரிப்பாளரிடம் முரண்டு பிடித்தது பற்றி தான் இந்த பதிவு.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார். அந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தால் தான் நான் நடிப்பேன் என்றெல்லாம் கூட தயாரிப்பாளரிடம் முரண்டு பிடித்து இருக்கிறார் நடிகர் வடிவேலு.

ஆனால், நடிகர் வடிவேலுவின் டிஸ்கஷனுக்கு எல்லாம் ப்ரியா பவானி சங்கர் ஒத்துவரமாட்டார் என்பதால் வேறு சில ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்து படத்தை முடித்து இருக்கிறார்கள்.

இப்படி இருக்க இவர் நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாக தொடங்கியது.

ஆனால், இடையிலேயே படம் நின்று போனது. இதற்கு காரணமும் ஹீரோயின் சமாச்சாரத்தில் நடிகர் வடிவேலு விடாப்பிடியாக இருந்தது தான் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த மூன்று நடிகைகள் உடன் நடிகர் வடிவேலு பயங்கர டிஸ்கஷன் நடத்தி இருக்கிறாராம்.

இப்படி வடிவேலு பற்றிய சில அந்தரங்கமான விஷயங்களை போட்டு உடைத்துள்ளார் பயில்வான்.

   

--Advertisement--