Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

“என் பின்னழகை.. அதை பண்ணி ஷூட் பண்ணாங்க..” ஆனால்..! – ரசிகர்களை ஷாக் ஆக்கிய நீலு ஆண்ட்டி..!

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சிங்கம் புலி இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை குத்து ரம்யா-வை தாண்டி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜீவா உடைய தோழியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை நீலு நஸ்ரின்.

ரசிகர்கள் பலரும் இவரை நீங்களும் ஆன்ட்டி என்று அடையாளம் சொல்கின்றனர். தன்னுடைய தோழியை தேடி வரும் நடிகை ஜீவா நீலு ஆண்டியின் அழகில் மயங்கி அவரிடம் பேச்சு கொடுப்பது போல் வீட்டுக்குள் நுழைவார்.

வீட்டுக்குள் நுழைந்த பிறகு நடக்கும் கூத்துக்களை படத்தில் பார்த்திருப்பீர்கள். இப்படித்தான் நடிகை நீலு நஸ்ரின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படியான காட்சிகளுக்கு பின்னால் நடிகை நீலு நஸ்ரின் அனுபவித்த கொடுமைகள் இருக்கின்றன.

அந்த கொடுமைகள் காரணமாக சினிமாவை வேண்டாம் போடா என்று ஒதுக்கி தள்ளிவிட்டு தற்போது அழகு நிலையம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி என்ன கொடுமை நடந்தது..? என்று நடிகை நீலு நஸ்ரின் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

--Advertisement--

சிங்கம் புலி படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் என்ன சொன்னார்களோ..? அதைத்தான் படமாக்கினார்கள். ஆனால், இதனுடைய ஒட்டுமொத்த காட்சி இப்படி மோசமான அர்த்தம் கொண்டதாக இருக்கும் என எனக்கு தெரியாது.

அப்போது எனக்கு தமிழும் அந்த அளவுக்கு தெரியாது. மட்டுமில்லாமல் படத்தின் காட்சிகளை முன்னும் பின்னுமாக படமாக்கினார்கள். அதனால் காட்சி எப்படி போகிறது என்பதை நம்மால் படப்பிடிப்பில் கணிக்க முடியாது.

நீங்கள் படத்தில் இரண்டாவதாக பார்க்கக்கூடிய காட்சியை முதலில் படமாக்கிவிட்டு. முதலில் பார்க்கக்கூடிய காட்சி இரண்டாவதாக படமாக்கினால்.. படப்பிடிப்பு தளத்தில் நடிக்கக்கூடிய நடிகர் நடிகைகளுக்கு அந்த காட்சி எப்படி வரும் என்று தெரியாது.

படம் வெளியான பிறகு தான் தெரியும். அதுபோலத்தான் எனக்கு இந்த காட்சியை படமாக்கினார்கள். குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் நான் நடந்து செல்லும் பொழுது என்னுடைய பின்னழகை ஜூம் செய்து படமாக்கினார்கள். இதனை நான் பார்த்தேன்.

ஆனால் இந்த அளவுக்கு மோசமான காட்சியாக இருக்கும்.. என்னை விட வயதில் குறைவான ஒரு நபருடன் அப்படி ஒரு காட்சியில் நடிப்பது போன்று இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனாலும், நான் நடித்து விட்டேன்.. அந்த படமும் வெளியாகிவிட்டது.. இனிமேல் பேசி என்ன பிரயோஜனம் இருக்கிறது என யோசித்தேன். அதன் பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது உண்மை.

முன்பை விட நிறைய இயக்குனர்கள் என்னை தொடர்பு கொண்டார்கள். ஆனால், வரக்கூடிய அனைத்து வேடங்களுமே இதே மாதிரியான கதை அம்சத்தில் இருந்தன. அதனால், நடிக்க கூப்பிடுகிறார்கள் ஆனால் இப்படி கேரக்டர் கொடுக்குறாங்களே என்பதால் சினிமாவே வேண்டாம் என முடிவெடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டேன் என கூறியிருக்கிறார் நடிகை நீலு நஸ்ரின்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

Trending Now

To Top