Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

படவாய்ப்பு இருக்குன்னு கூட்டிகிட்டு போவாங்க.. ஆனா.. போனதுக்கு அப்புறம்.. ரகசியம் உடைத்த நீலு ஆண்ட்டி..!

சினிமாக்களில் நடிக்கும் துணை நடிகைகளுக்கு பொதுவாக பெயரும் மதிப்பும் மரியாதை இது எதுவுமே கிடைக்காது கிடைப்பதே கிடையாது.

டாப் ஹீரோயின்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு இயக்குனர் முதல் தயாரிப்பாளர்கள் கேமராமன்கள் வரை பலரும் கையெழுத்து கும்பிட்டு போட்டு மிகுந்த மரியாதையோடு அவர்களை நடத்துவார்கள்.

ஆனால் துணை நடிகைகள் என்றால் மிகவும் கேவலமாக அந்த படத்தின் ஹீரோயின்களை பார்க்கும் கொடுமைகளும் நடந்தேறிதான் வருகிறது.

துணை நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள்:

அப்படித்தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் துணை நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி பிரபல நடிகையான நீலு வெளிப்படையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.

--Advertisement--

நடிகை நீலு ஜீவா நடிப்பில் வெளிவந்த சிங்கம் புலி படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ஃபேமஸானார். அந்த படத்தில் ஜீவாவின் தோழியின் அம்மாவாக நீலு நடுத்திருப்பார்.

அதில் அவர் ஆன்டி கதாபாத்திரத்தில் ஜீவாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த வாலிப ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் பெயரும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த படத்தின் மூலமாக ஒட்டுமொத்த வாலிப வாலிப ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் நீலு.

இவர் இந்த படத்தில் மட்டும் தான் நடித்திருக்கிறார் என நாம் நினைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்னரே அவர் ஆயுத எழுத்து, புலி, ஆஞ்சநேயா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஆனால் அந்த படங்கள் எதுவும் அவருக்கான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் துணை நடிகைகளுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் சினிமாவில் நடக்கும் கொடுமைகள் பற்றி நீலு பேசியுள்ளார்.

கழிவறை கூட விடமாட்டாங்க:

துணை நடிகைகளுக்கு என்று ஷூட்டிங்கில் எந்த ஒரு வசதிகளுமே செய்து கொடுக்க மாட்டார்கள். அடிப்படை வசதிகள் கூட இருக்காது.

எங்களுக்கு கழிவறை இருக்காது , உடை மாற்றுவதற்கு அறை இருக்காது, உட்கார்ந்து ஓய்வெடுக்க சேர் கூட கொடுக்க மாட்டாங்க.

நாங்கள் உடை மாற்ற வேண்டும் என பொதுவெளியில் சூட்டிங் நடக்கும்போது இயக்குனர்களிடம் கூறினால் அதோ இருக்கிறதே ஹீரோயின் கேரவன் அங்கு சென்று அவர்களிடம் அனுமதி கேட்டு மாற்றிக்கொள்ளுங்கள் என சொல்லுவாங்க.

அங்க போனால் ஹீரோயின் மேனேஜர் எங்களை துரத்தி அடிப்பார்கள். இங்கெல்லாம் வரக் கூடாது போங்க என்று சொல்லிவிடுவார்கள்.

இப்படித்தான் துணை நடிகைகள் மிகவும் சிரமப்பட்டு படங்களில் நடிக்க வேண்டி இருக்கும் . அப்படியே நாங்கள் படங்களில் நடிக்க சென்றால் கிட்டதட்ட 18 மணி நேரம் சூட்டிங் நடக்கும்.

அப்ப தூங்குறதுக்கு இடம் கூட இருக்காது. நாங்கள் மிகவும் சோர்வாக இருக்கும் போது அருகில் இருக்கும் பைக்கு மற்றும் தரையில் அமைந்து கொண்டே தூங்குவோம்.

பிச்சைக்காரி போல் நடத்தும் ஹீரோயின்கள்:

அவ்வளவு கொடுமைகளை அனுபவிப்போம். நடிக்க சென்றாலே துணை நடிகைகளை பார்த்தாலே அந்த படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் மிகவும் கேவலமாக கீழ்த்தரமாக பார்ப்பார்கள்.

நாங்கள் ஏதோ பிச்சை எடுக்க வந்தது போல் எங்களை நடத்துவார்கள். குட்டையான ஆடைகளை கொடுத்து நடிக்க விடுவார்கள்.

இந்த உடையில் நடிக்க முடியாது எனக் கூறினால். நடிக்க முடியாதவர்கள் அப்படியே போய்விடுங்கள் என துரத்தி விடுவார்கள்.

துணை நடிகைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டமாக ஏற்றுக்கொண்டு சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு கொண்டு போவார்கள்.

இப்படி ஆடு மாடுகளை போல தான் துணை நடிகைகளுக்கு மதிப்பும் மரியாதையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்.

ஆடு மாடு போல் வண்டியில் ஏதுவார்கள்:

இதையெல்லாம் சகித்துக்கொண்டு எங்களுடைய குடும்ப சூழ்நிலை பண தேவைக்காக நாங்கள் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.

குட்டையான ஆடைகளையும் அணிந்து கொண்டு அவர்கள் செய்யும் அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டு திரைப்படங்களில் நடிக்கிறோம்.

அப்படி அவர்கள் கொடுக்கும் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் இதுபோன்ற ஆன்ட்டி, ஐட்டம் போன்ற ரோல்களில் நாங்கள் நடிக்கும் போது எங்களுடைய சொந்த வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படுகிறது.

அப்படியும் நாங்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கு எங்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைப்பதே கிடையாது.

இதனால் சினிமாவில் எந்த ஒரு பயனும் துணை நடிகைகளுக்கு கிடைப்பதே கிடையாது. நாங்கள் வெறும் அன்றாட தேவைக்காக, வயிற்று பிழைப்புக்காகவும் தான் சினிமாவில் இது போன்ற நடிக்கிறோம்.

இவ்வாறு துணை நடிகைகளின் பல்வேறு துன்பங்களையும், சிரமங்களையும் பற்றி நடிகை நீலு வெளிப்படையாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாக வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top