அடேங்கப்பா..! – வேற லெவல்..! – ஜெயிலர் படத்தின் கதை இதுதான்..! – வைரலாகும் தகவல்..!
நடிகர் ரஜினி மற்றும் நெல்சன் இருவரும் சேர்ந்து ஜெயிலர் எனும் திரைப்படத்தை உருவாக்கி இந்த படத்தின் டீசர் தற்சமயம் வெளியான நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி தற்சமயம் பல தோல்வி படங்களை கொடுத்து துவண்டு போய் இருந்த நிலையில் தற்சமயம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சற்று மாதங்களில் திரைக்கு வரும் நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் இயக்குனர் நெல்சன் முன்னதாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயை வைத்து பீஸ்ட் எனும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மாபெரும் தோல்வி படமாக அமைந்ததை அடுத்து ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் கம் பெக் கொடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த ரவி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகை நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஆதலால் இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களாலும் பெரும் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
--Advertisement--
இந்த நிலையில் நடிகர் கமலஹாசன் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து பிரம்மாண்டமான முறையில் படம் வெற்றி பெற்றதை அடுத்து அதே பாணியில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தில் பின்பற்றி இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் கதை பற்றி சமூக வலைதளங்களில் நிறைய தகவல்கள் தற்சமயம் பரவி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சட்டையில் அணிந்து வருவதால் இந்த படம் ஒரு பிளாஷ்பேக் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்ட படம் என நிறைய கணிப்புகள் செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த படத்தை ஒட்டுமொத்தமாக ஃப்ளாஷ் பேக் கொண்டு தான் கதை நகரும் என்று கணித்திருக்கிறார்கள். இதனை அடுத்து பட குழுவைச் சேர்ந்த யாரும் இப்படி தகவல்கள் தெரிவிக்கவில்லை.
இருந்தாலும் சமூக வலைதளங்களில் நிறைய சினிமா எக்ஸ்போர்ட் போன்றவர்கள் இந்த படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறி வருகின்றனர்.