Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

கனகா வாழ்க்கை சீரழித்த NTR..?… திருமணத்திற்கு முன்பே நடந்த கொடூரம்..!.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

நடிகை கனகாவின் வாழ்க்கையை சீரழித்த என் டி ராமராவ் என்ற தகவல் கடந்த இரண்டு வாரமாக இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது.

என்ன விஷயம்..? நடிகரும் ஆந்திராவின் மறைந்த முதல்வருமான என்டி ராமராவ் கனகாவின் வாழ்க்கையில் செய்த மோசம் என்ன..? என்பது குறித்த பரபரப்பான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கடந்த 1949 ஆம் ஆண்டு வெளியான மனதேசம் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் சாதாரண நடிகராக நுழைந்தவர் என்டி ராமராவ்.

தமிழில் கடந்த 1951 ஆம் ஆண்டு வெளியான பாதாள பைரவி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வேலைக்காரி மகள் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

--Advertisement--

இப்படி தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்த நடிகர் எம்டி ராமராவ் ஒரே வருடத்தில் பத்து படங்களில் கூட ஹீரோவாக நடித்த அசத்தியிருக்கிறார்.

தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருந்த என்டி ராமராவுக்கு கடவுள் வேடத்தில் நடிப்பதற்காக சில திரைப்படங்கள் அமைந்தன. அந்த படங்களில் திருப்பதி ஏழுமலையான் வேடத்திலும், கிருஷ்ண பகவான் வேடங்களிலும் நடித்து பொதுமக்கள் மத்தியில் தன்னை கடவுளின் மறு உருவமாக பிரதிபலித்துக் கொண்டார் என்டி ராமராவ்.

என்டி ராமராவ் ஒரு கடவுள் என்று தான் பொதுமக்கள் பலரும் அவரை நம்பினார்கள். இன்னும் சொல்லப்போனால் அவருடைய படங்களை தான் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யும் அளவுக்கு இருந்தன.

அந்த அளவுக்கு அவருக்கு அந்த வேடங்கள் பொருத்தமாக இருந்தன என்பதுதான் இந்த விஷயம். இப்படி தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 1993 ஆம் ஆண்டு ஸ்ரீநாதா கவி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இடையில் 1984 ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற இவர் அதனை தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார் 1994 ஆம் ஆண்டும் வெற்றி பெற்றார். கடந்த 1996 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

ஆரம்பத்தில், முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த என் டி ராமராவ் தன்னுடைய நண்பரும் நடிகருமான எம் ஜி ஆர் இடம் ஆலோசனை கேட்டிருக்கிறார். அவரும் தனக்கு தெரிந்த அரசியல் யுத்திகளை சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இதையெல்லாம் தாண்டி என் டி ஆர்-க்கு ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றில் அதீத நம்பிக்கை இருந்திருக்கிறது. கேரளா நம்பூதிரிகள் சிலரின் வழிகாட்டுதலின்படி திருமணம் ஆகாத கன்னி கழியாத இந்த நட்சத்திரம் இந்த ராசியில் இருக்கக்கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நிச்சயம் நீங்கள் ஆந்திராவின் முதலமைச்சர் ஆவீர்கள் என்று கூறி இருக்கிறார்கள் அந்த நம்பூதிரிகள்.

இதனை நம்பிய என்டி ராமராவ் இந்த லக்னம் இந்த ராசியில் இருக்கக்கூடிய கன்னி கழியாத பெண்ணை தேடி இருக்கிறார். அப்போது தன்னுடைய மிகவும் நெருங்கிய தோழியான நடிகை தேவிகா-வை தொடர்பு கொண்டு இருக்கிறார். இந்த விஷயத்தையும் கூறியிருக்கிறார்.

இதனை அறிந்த நடிகை தேவிகா தன்னுடைய மகளையே திருமணம் செய்து கொடுக்க சம்மதித்திருக்கிறார். ஆம், நடிகை தேவிகாவின் மகள் வேறு யாரும் கிடையாது நடிகை கனகா தான்.

என்டி ராமராவ் கேட்ட அதே ராசி.. அதே லக்னம்.. இன்னும் திருமணம் ஆகாத.. கன்னி கழியாத பெண்.. என்பதால் தன்னுடைய மகளையே என்.டி.ராமராவ்-க்கு திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து அடுத்த நாளே தன்னுடைய மகளை அழைத்துச் சென்று இருக்கிறார்.

அங்கே என்டி ராமராவ்-ற்கும் கனகாவுக்கும் சடங்கு முறையில் திருமணம் நடந்திருக்கிறது. எப்படி ஒரு பூஜையில் ஒரு எலுமிச்சை பழம்.. ஒரு தேங்காயை வைத்து பூஜை முடிந்ததும் அதனை தூக்கி போட்டு விடுவார்களோ.. அதுபோல நடிகை கனகாவை அந்த பூஜையில் வைத்து திருமணம் செய்து கொண்டு திருமணம் முடிந்ததும் அவருடைய அம்மாவுடன் அனுப்பி விட்டார் என்டி ராமராவ்.

ஆனால் இந்த பூஜைக்கு பிறகு கனகாவின் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அவர் புத்தி சுவாதீனம் இல்லாத ஒரு போல சில நேரங்களில் நடந்து கொண்டு இருக்கிறார். அவருடைய சக்திகளை இழந்தவர் போலவும் ஏதோ ஒரு புதிய நபர் போலவும் நடந்து கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதிலிருந்து வெளியில் கொண்டு வரத்தான் நடிகை கனகாவை ஏதேனும் ஒரு வேளையில் பிஸியாக இயங்க வைத்தால் அவர் தன்னுடைய நிலையை அறிந்து வைத்திருப்பார் தன்னுடைய நிலையை மறவாமல் இருப்பார் என்று அவரை படங்களில் நடிக்க வைத்திருக்கிறார் அவருடைய தாய் தேவிகா.

அதன்பிறகு படங்களில் நடித்த முடித்த அவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் என்றும் தற்போதுமே அவருடைய அந்த மனநல பாதிப்பு அதற்கு உண்டான அறிகுறிகள் தென்படுகிறது என்று கூறுகிறார்கள்.

என்.டி.ராமாராவ் திருமண சடங்கின் போது நடந்த பூஜைகள் தான் கனகாவின் புத்தி பேதலிக்க காரணமாக அமைத்து விட்டது. தன்னுடைய சுய லாபத்துக்காக நடிகை கனகா-வின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் என்.டி.ஆர்.

இந்த விவகாரமான விஷயத்தை தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress

Trending Now

To Top