தமிழ் திரை உலகில் ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்த பிரியாமணி [Priyamani]. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற போட்டோவில் சேலையில் சுத்தி எடுத்த பஞ்சுமிட்டாய் போல ஜொலிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பக்காவான நடிப்புத்திறனை வெளிப்படுத்திய இவருக்கு தற்போது திரையுலகில் அதிக அளவு வாய்ப்புகள் இல்லை. குறிப்பாக தமிழ் திரைப்படத்தில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.
இவர் 2023 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் இது ஒரு கனாக்காலம், மது, பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா ,ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் ,ராவணன் போன்ற படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இதில் பருத்திவீரன் படத்தில் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதினையும், ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார். இந்த படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
2012ல் இவர் நடிப்பில் வெளிவந்த சாருலதா படத்திற்கு பிறகு கன்னட படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். தமிழ் படங்களில் அந்த அளவு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
--Advertisement--
படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தாராளமாக கவர்ச்சியை காட்டி வரும் இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஆனது தற்போது மாஸ் ஹிட் ஆகிவிட்டது என்று கூறலாம்.
இதனை அடுத்து இவரது புடவை அணிந்த போட்டோஸ் அனைத்தும் வைரலாக இணையத்தில் பரவி வருவதால் இளைஞர்கள் அனைவரும் இந்த போட்டோவை தொடர்ந்து பார்த்து அந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை தந்திருக்கிறார்கள்.
மேலும் சில இளைஞர்கள் இவரை மீண்டும் தமிழ் திரைப்படத்தில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.