Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்க வாழ்க்கையில நிம்மதி நிலைக்க… சந்தோஷம் பொங்க எளிய பரிகாரங்கள்..!!

வாழ்க்கையில் நாம் எண்ணற்ற இடர்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். அப்படி இடர்களை சந்திக்க வேண்டி இருந்தால் அதற்கு என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இது போன்ற சிக்கல்களை நீங்கள் தொடர்ந்து அனுபவித்து வந்தீர்கள் என்றால் அதைக் தீர்த்து வைக்கக்கூடிய அளவு நமது பெரியவர்கள் நமக்காக சொல்லிச் சென்ற பரிகாரங்களை நீங்கள் பின்பற்றி செய்வது மூலம் எண்ணற்ற பலன்களை அடைய முடியும். அதை விடுத்து அது மூடநம்பிக்கை என்று முத்திரை குத்தி நின்றீர்கள் என்றால் உங்களுக்கு அந்த கஷ்டங்கள் தீராது.

அப்படிப்பட்ட எளிய பரிகாரங்கள் என்னென்ன உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நீங்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கஷ்டங்களை தீர்க்கும் எளிய பரிகாரங்கள்

ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தில் விபத்து என்பது எங்காவது ஒரு மூலையில் நிமிடத்திற்கு நிமிடம் நடந்து கொண்டே இருக்கிறது. அப்படி விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க நீங்கள் நினைத்தீர்கள் என்றால் காகித பூவை உங்கள் கையோடு செல்லும் பகுதிகளுக்கு எடுத்துச் சென்றால் கட்டாயம் உங்களுக்கு வாகன விபத்து என்பது ஆகாது.

உங்கள் வீட்டை சுற்றி இயற்கையான நீரோட்டம் இருந்தால் அது நமக்கு நன்மை பயக்கும். அப்படி இயற்கையான நீரோட்டம் எதுவும் இல்லை என்றால் செயற்கையான நீரோட்டத்தை உங்கள் இல்லங்களில் நீங்கள் வைத்துக் கொள்வதின் மூலம் உங்கள் வீட்டில் நிம்மதி நிலவும்.

--Advertisement--

உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தை இரவு நேரம் உறங்காமல் அழுது கொண்டே இருந்தால் நீங்கள் கவலைப்படாதீர்கள். நள்ளிரவு ஏற்படும் தூக்கத்தில் குழந்தை பயந்து இருக்குமோ என்று எண்ணம் உங்களுக்கு இருந்தால் குழந்தை உறங்கும் இடத்தில் ஒரு டம்ளரில் கல் உப்பை கரைத்து வையுங்கள். குழந்தை நிம்மதியாக தூங்கும்.

குழந்தை வரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் அகில் பட்டையை பொடி செய்து தூபம் போட வேண்டும். இந்த பட்டை பொடியானது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.இதை உங்கள் வீடுகளில் போட்டு வந்தால் உங்களுக்கு விரைவில் பிள்ளை பேறு கிடைக்கும்.மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் நம்பிக்கையோடு பயன்படுத்திப் பாருங்கள் நிச்சயம் நன்மை ஏற்படும்.

Continue Reading
 

More in

Trending Now

To Top