Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

பாண்டியராஜனிடம் மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். எம்ஜிஆர் – சிவாஜி வரிசையில், ரஜினி -கமல் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்து வருகின்றனர். ரஜினி சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, அவரது ஒவ்வொரு அசைவும் மீடியாவில், பெரிதாக காட்டப்படுகிறது.

மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஒரு நடிகர் என்பதையும் கடந்து, இந்திய அளவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு மனிதராக ரஜினிகாந்த் புகழ் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனினும் ரஜினியை பொருத்தவரை, புகழின் உச்சியில் இருந்தும், பார்ப்பதற்கும், பழகுவதற்கும் மிக எளிமையான மனிதராகவே ரஜினி இருக்கிறார். படப்பிடிப்பு தளங்களில், அறிமுக நடிகர்களிடம் கூட அன்பாகவும், அக்கறையாகவும் நடந்துகொள்வார் ரஜினி.

மிகப்பெரிய நடிகர் என்ற பந்தா அவரிடம் துளியும் இருக்காது என்பது, மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் என்புதும் உண்மை. இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பாண்டியராஜன், பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்றை, சமீபத்தில் ஒரு நேர்காணலின் போது வெளிப்படையாக கூறி இருக்கிறார்.

நடிகர் பாண்டியராஜ், ரஜினிகாந்த் உடன் அப்போது வரை நடித்தது இல்லை என்றாலும், நடிப்புத்துறையிலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமான நண்பர்களாக தான் இருக்கின்றனர்.

--Advertisement--

பல ஆண்டுகளுக்கு முன், வெளிநாடு செல்வதற்காக, நடிகர் பாண்டியராஜ் விமான நிலையத்துக்கு சென்றிருக்கிறார். அப்போது, விமான நிலையத்தில் ரஜினிகாந்த் வந்திருக்கிறார். அப்போது, ரஜினிகாந்தை பார்த்து, பாண்டியராஜ் கையசைத்து இருக்கிறார். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கி இருந்த ரஜினிகாந்த் பாண்டியராஜை பார்த்தும், பேசாமல் சென்றுள்ளார். பாண்டியராஜ், இந்த சம்பவத்தை அடுத்த சில நிமிடங்களில் மறந்து விட்டார்.

ஆனால், அடுத்த நாள் ரஜினியிடம் இருந்து போன் அழைப்பு, பாண்டியராஜூக்கு வந்திருக்கிறது. போனில் பேசிய ரஜினிகாந்த், விமான நிலையத்தில், கூட்ட நெரிசலில் உங்களை பார்த்தும், என்னால் பேச முடியவில்லை என்று கூறி, அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

தற்செயலாக நடந்த ஒரு விஷயத்துக்காக, பாண்டியராஜை அழைத்து, ரஜினி மன்னிப்பு கேட்டதும், பாண்டியராஜ் அசந்து போய் விட்டார். ஏனெனில் அப்போதே, ரஜினிகாந்த் மிகப்பெரிய நடிகராக, தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்துள்ளார்.

 

ஆனால், சக நடிகராக, இயக்குநராக பாண்டியராஜை நினைக்காமல், அவருடன் பேசாமல் சென்றதற்காக, ரஜினிகாந்த் போனில் அழைத்து, பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்டதை இன்றும் மறக்காமல் அதை சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார் நடிகர் பாண்டியராஜ்.

Continue Reading
 

More in

Trending Now

To Top