லால் சலாம் படத்தை பார்த்துவிட்ட ரஜினி சொன்ன அந்த வார்த்தை..!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் முதல் மகள் ஐஸ்வர்யா, தனுஷை திருமணம் செய்துக்கொண்டார். லிங்கா, யாத்ரா என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். அதே போல் சவுந்தர்யா முதல் திருமணம் செய்து விவகாரத்தான நிலையில், 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

ஐஸ்வர்யாவும், தனுஷூம் காதலித்து திருமணம் செய்த நிலையில், பல ஆண்டுகளாக இருவரும் மனமொத்த தம்பதியராக தான் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஆண்டில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக தங்களது சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் பல மாதங்களாகியும் இன்னும் இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போகவில்லை. இது இரு தரப்பு பெற்றோர்களையும் ரிலாக்ஸ் ஆக வைத்துள்ளது.

இதற்கிடையே கணவரை விட்டு பிரிந்துள்ள ஐஸ்வர்யா, படம் டைரக்ட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் லைக்கா தயாரிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் ரஜினி 45 நிமிடங்கள் 22 காட்சிகளில் வரும்படி கேமியோர ரோலில் நடித்துள்ளார். வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்போதும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் லால் சலாம் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யாவையும், படக்குழுவையும் பாராட்டியிருக்கிறார். இந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது. பொங்கலுக்கு வராமல் போனாலும், இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறியிருக்கிறார். அதனால் படக்குழுவினர் ஏகப்பட்ட குஷியில் இருக்கின்றனர்.

--Advertisement--