Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ரேஷ்மா பசுபுலேட்டி

“இலவம் பஞ்சு போல உடம்பு..” – தாங்க முடியல ரேஷ்மா பசுபுலேட்டி குறும்பு..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், அந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை எகிற வைத்திருக்கிறது. சீரியலில் நடிப்பது போக மீதி நேரங்களில், இவர் முழு கவனம் செலுத்துவது, இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில்தான். தினமும் குட்மார்னிங், குட்நைட் சொல்வது போல, இவரது கிளாமர் படங்கள், இவரது சமூக வலைதள பக்கங்களை நிரப்பி விடுகின்றன.பாக்கியலட்சுமி சீரியலில் பிரபலமாவதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். குறிப்பாக, அடிக்கடி இவரை ஆறுதல் சொல்வதாக கட்டி கட்டிப் பிடித்தே சில ஆண் போட்டியாளர்கள், மனைவி அருகில் இல்லாத ஏக்கத்துக்கு ஆறுதல்பட்டுக்கொண்டனர்.

ரேஷ்மா நியூஸ் ரீடர், ஏர் ஹோஸ்டலாக, விமானத்தில் பணி செய்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்.

பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர். யு.எஸ் சில் கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்த ரேஷ்மா, 18 வயதிலேயே திருமணம் செய்திருக்கிறார். பையன் பிறந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பிரிந்து விட்டார். பின்னர் பாரினர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என நாளடைவில் தெரிய வர, அவரிடம் இருந்து பிரிய நினைத்திருக்கிறார். ஆனால், அவர் விவாகரத்துக்கு ஒத்து வராமல் ரேஷ்மாவை, அடித்து துன்புறுத்தி டார்ச்சர் செய்திருக்கிறார். அப்போது, ரேஷ்மா 5 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார். இந்த விஷயங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே வெளிப்படையாக ரேஷ்மா சொல்லி இருக்கிறார்.

திருமண வாழ்க்கை வெறுத்துப்போய், ஐதராபாத் வந்த போது, மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.
அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார்.

--Advertisement--

அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார். ரேஷ்மாவின் லேட்டஸ்ட் படங்கள் என, தினம் தினம் அவரது கிளாமர் படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குவிந்துகொண்டே இருக்கிறது. ரசிகர்களும் சலிக்காமல் பார்த்து, ரசித்து லைக் பட்டன்களை அழுத்திக்கொண்டே இருக்கின்றனர்.

Continue Reading
 

More in

Trending Now

To Top