என்னை ரூமுக்குள்ள கூட்டிகிட்டு போய் சில்க் செய்த விஷயம்.. இதுவரைக்கும் என்னால் ஜீரணிக்க முடியல.. ஷகிலா ஆதங்கம்..

என்னை ரூமுக்குள்ள கூட்டிகிட்டு போய் சில்க் செய்த விஷயம்.. இதுவரைக்கும் என்னால் ஜீரணிக்க முடியல.. ஷகிலா ஆதங்கம்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பல்வேறு தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் தேசிய மொழியிலும் நடித்திருக்க கூடிய நடிகை ஷகிலா ஆரம்பத்தில் மலையாளத்தில் வெளி வந்த ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து இவர் அந்த உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்ற திரைப்படங்களில் நடித்து வந்த காரணத்தால் இவருக்கு ஆண் ரசிகர்கள் அதிகளவு இருக்கிறார்கள். மேலும் இவரை சைக்லோன், லேடிலால் என்று அடைமொழி தந்து அழைத்து இருக்கிறார்கள்.

நடிகை ஷகிலா..

15 வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் இது வரை சுமார் 110 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த மாதிரியான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேதங்களிலும் சில படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.


குறிப்பாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயம், அழகிய தமிழ் மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தை திறம்பட செய்திருப்பார்.
அதுமட்டுமல்லாமல் மறுமலர்ச்சி தெரு படைப்பில் விவேகுக்கு ஜோடியாக தனது குணசத்திரன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் கவர்ச்சி கன்னி என்ற முத்திரையை நீக்க முயற்சி செய்தார்.

90 காலகட்டங்களில் மலையாளத்தில் கொடி கட்டி பறந்த நடிகை ஷகிலா திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மோகன்லால், மம்மூட்டி போன்ற முன்னணி நடிகர்களே அவரின் படத்தை பார்த்து பயந்து இருக்கிறார்கள். அந்த அளவு பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வந்தார்.

--Advertisement--

சிலுக்கோட ரூமுக்குள் நடந்த விவகாரம்..

இதை அடுத்து மலையாள திரை உலகம் இவரது நடிப்புக்கு தடை விதித்ததின் காரணத்தை அடுத்து தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை விடுத்து சின்னத்திரை பக்கம் தாவினார்.

மேலும் இவர் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை அடுத்து இவருடைய சமையல் திறமை வெளி வந்தது. இந்த போட்டியில் இவர் பைனான்ஸ் வரை முன்னேறி அசத்தினால் இதனை அடுத்து இவருக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.


ஆரம்ப காலத்தில் ஷகிலாவும் சில்க் ஸ்மிதாவும் ஒரு படத்தில் சேர்ந்து நடித்த போது ஒரு காட்சியில் சில்க் ஸ்மிதா ஷகிலாவை நிஜமாக அறைந்து விட்டார். அந்த அறை எப்படி இருந்தது தெரியுமா? கன்னம் சிவக்கும் அளவுக்கு பலத்த அடி விழுந்தது. எதற்கு இப்படி அடிக்கிறார் என்று நான் இயக்குனரிடம் புகார் செய்தேன்.

ஆதங்கத்தை கொட்டிய ஷகிலா..

இதுவரை இப்படி ஒரு அடியை வாங்காத ஷகிலா இயக்குனரிடம் புகார் செய்ததை அடுத்து நடிகை சில்க் ஸ்மிதா அதற்கு கொடுத்த விளக்கத்தை தான் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து சில்க் ஸ்மிதா நான் உன்னை அடித்தது ரொம்ப வலிக்கிறதா.. அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.. நீ வெறும் பாவாடையை மட்டும் கட்டிக்கிட்டு நின்னுட்டு இருந்தியா சீன் ஒழுங்கா வரலினா.. ரீடேக் போவாங்க.. உனக்குத்தான் கஷ்டமா இருக்கும் அதனாலதான் ஒரே டேக்கில் ஓகே ஆக வேண்டும் என்பதற்காக நிஜமாகவே அடித்தேன் என்று சில்க் ஸ்மிதா கூறி இருக்கிறார்.


எனினும் சில்க் ஸ்மிதா அத்தனை பேர் முன்னால் என்னை அடித்து விட்டு தற்போது யாரும் இல்லாத தனிமையான சூழ்நிலையில் என்னிடம் மன்னிப்பு கேட்பது போல் பேசியது என்னால் இன்று வரை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அதைவிட மோசமான உடைகளை எல்லாம் அணிந்து கொண்டு பல டேக்குகளில் நடித்திருக்கிறோம். எனவே சிலுக் கூறிய சமாதானத்தை என்னால் இன்று வரை ஜீரணிக்க முடியவில்லை என்ற விஷயத்தை போட்டு உடைத்திருக்கிறார் நடிகை ஷகிலா.

இதனை அடுத்து இந்த பேச்சு தற்போது பரபரப்பாக ரசிகர்களின் மத்தியில் பரவி வருவதோடு சில்க் ஸ்மிதா, ஷகிலா அக்காவை அடித்தார்களா? என்ற ரீதியில் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.