காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..

காசுக்காக இப்படி பண்ணலாமா.. கிரணுக்கு கிளாஸ் எடுத்த ஷகிலா.. ரசிகர்கள் குபீர்..

தமிழ் சினிமாவில் கிளாமர் பாம்கள் என்று அழைப்பதாக இருந்தால் அந்த பெயர்களுக்கு மெத்த பொருத்தமாக கிரண் மற்றும் ஷகிலா இருப்பார்கள்.

ஏனெனில் தமிழ் சினிமாத்துறைக்கு இருவரும் அந்த அளவுக்கு கவர்ச்சியில் கலைச்சேவை செய்திருக்கிறார்கள் என்றால் அது மிகையல்ல.

கிரண்

கடந்த 2002ம் ஆண்டில் நடிகை கிரண், ஜெமினி என்ற படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

இந்த படத்தில் வடக்கத்தி பெண் கேரக்டரில் மிக அசத்தலான ஒரு நடிப்பை தந்திருந்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதன்பிறகு அஜீத்குமார் ஜோடியாக வில்லன் படத்தில் கிரண் நடித்திருந்தார். அந்த படமும் வெற்றிப் பெற்ற நிலையில், அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அன்பே சிவம் படத்தில், நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஆனால் கடைசியில் மாதவனை திருமணம் செய்துக்கொள்வார்.

--Advertisement--

அன்பே சிவம் படத்தில் காதல் காட்சிகளில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியவர் கிரண். ஆனால் ஏனோ தமிழில் தொடர்ந்து படவாய்ப்பு இல்லாமல் இருந்தார் கிரண்.

எக்கச்சக்கமான கவர்ச்சியில்…

மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில், வின்னர் என்ற படத்தில் பிரசாந்த் ஜோடியாக கிரண் நடித்திருந்தார். இந்த படத்தில் பெண்களே வெட்கப்படும் அளவுக்கு எக்கச்சக்கமான கவர்ச்சியில், அதிரிபுதிரியாக நடித்திருந்தார் கிரண்.

இந்த படத்தில் கிரண் நடித்திருந்த கவர்ச்சியை பார்த்து, குஷ்புவே சுந்தர் சியை திட்டியதாக, அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.

அந்தளவுக்கு டூபீஸ் உடையில் கிரண், முன்னழகு குலுங்க குலுங்க பல காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடித்திருந்தார்.

வாடியம்மா ஜக்கம்மா

அதன்பிறகும் நடிப்பில் வாய்ப்பு இல்லாததால் திருமலை படத்தில் விஜய் உடன் வாடியம்மா ஜக்கம்மா என்ற குத்தாட்ட பாடலுக்கு கிரண் குலுக்கல் நடனம் ஆடியிருந்தார்.

அந்த படமும் ஹிட் ஆனது. பாடலும் ஹிட் ஆனது. ஆனால் கிரணுக்கு வாய்ப்புகள் வரவில்லை.

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் கிரண், அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை, குலுக்கல் நடன வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடுகிளப்பி வருகிறார்.

இதையும் படியுங்கள்:  என்னமா ட்ரெஸ் இது.. எல்லலாமே தெரியுதே.. ராய் லட்சுமி கிளாமர் போட்டோ ஷூட்..

அதிலும் பலான ஆப் ஒன்றை ஆரம்பித்து கிரணுடன் ஷாட் செய்யவும், வீடியோ காட்சியில் வரவும் நிறைய பணம் வசூலித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இதை கொரோனா காலகட்டத்தில் வருமானத்துக்காக செய்ததாக, நடிகை கிரணே ஒத்துக்கொண்டுள்ளார்.

பலான ஆப்

சமீபத்தில் நடிகை ஷகிலா, நடிகை கிரணை தனது யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்தார். அப்போதுதான் இந்த பலான ஆப் விஷயம் குறித்து கேட்ட போது, ஷகிலாவுக்கு இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.

இளமை ஊஞ்சல்

அப்போது 2016ம் ஆண்டில் வெளிவந்த இளமை ஊஞ்சல் என்ற படத்தில், ஏன் அவ்வளவு கவர்ச்சியா நடிச்சே என, கிரணை பார்த்து ஷகிலா கேள்வி கேட்கிறார்.

அதற்கு கிரண், அந்த படத்துல நடிக்க நிறைய பணம் கொடுத்தாங்க, நமீதாவும் நடிச்சாங்க. நாங்க மொத்தம் 5 ஹீரோயின்கள் நடிச்சோம்.

இதையும் படியுங்கள்:  சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடிச்ச நடிகையா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

அதனால் அது கேர்ள்ஸ் ட்ரிப் மாதிரி ஜாலியாக இருந்தது என்று பதில் அளித்துள்ளார் கிரண்.

காசுக்காக இப்படி பண்ணலாமா…

காசுக்காக இப்படி பண்ணலாமா.. மோசமான கவர்ச்சியில் நடிக்கலாமா, என்கிற வகையில் இந்த நேர்காணலில் கிரணுக்கு கிளாஸ் எடுத்தார் நடிகை ஷகிலா.

இதைப் பார்த்து ரசிகர்கள் குபீர் என்று சிரித்த ரசிகர்கள், உங்களை விட அவங்க ஒண்ணும் அதிகமாக அந்த படத்துல ஆபாசமா நடிக்கலே, நீங்களுக்கு அவங்களுக்கு அட்வைஸ் பண்றீங்களா, என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.