வாய்ப்பு தரேன்னு சொல்லி 2 நாள் என்னை.. விஜய் பட இயக்குனர் மீது ஷாக்சி அகர்வால் புகார்..!

சினிமா துறையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள் நடந்திருக்கும். எத்தனையோ பேர் சினிமாவில் நடிக்க வந்து ஏமாற்றம் அடைந்தவர்கள் உண்டு. சினிமாவில் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்கிறேன் என்று கூறிவிட்டு, ஏனோதானோவென்று ஏதோ ஒரு காட்சியில் நிற்க வைத்து விட்டு ஏமாற்றி விடுபவர்களும் உண்டு.

சினிமாவில் வாய்ப்பு

சென்னையில் சினிமா ஆசையின் பலரும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு ஆசையாக செல்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களை அவர்களது ஆசையை பயன்படுத்தி பலரும் அவர்களை ஏமாற்றி விடுவார்கள்.

இது சினிமா வாய்ப்பு கேட்டு செல்பவர்களுக்கு மட்டுமல்ல, ஓரளவு மக்கள் மத்தியில் பாப்புலராக இருப்பவர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நடந்தது உண்டு. ஆனால் இதை வெளியே சொல்வதால் என்ன மாறிவிடப் போகிறது என்பதால் சிலர் அதை வெளிப்படையாக கூறுவதில்லை என்பது உண்மைதான்.

ஷாக்சி அகர்வால்

ஷாக்சி அகர்வால் மாடலிங் துறையிலிருந்து, சினிமாவில் நடிக்க வந்த ஒரு நடிகை. தமிழ் மற்றும் கன்னடம், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். அவர் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருந்தவர்.

--Advertisement--

தமிழில் இவர் சொற்பமான படங்களில் தான் நடித்துள்ளார். குறிப்பாக பிக் பாஸ் 3 விஜய் டிவியில் கலந்துகொண்ட வகையில், மக்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றார்.

ராஜா ராணி படத்தில்…

ஷாக்சி அகர்வால் ராஜா ராணி என்ற படத்தில், சில காட்சிகளில் நடித்திருக்கிறார். அது தவிர காலா, டெடி, அரண்மனை 3 நான் கடவுள் இல்லை, போன்ற படங்களில் நடித்தவர் ஷாக்சி அகர்வால்.

அவர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின், யோ பேபி என்ற இசை வீடியோவில் பங்கு பெற்றவர். அதுதவிர டப்பிங் கலைஞராக 2019 ஆம் ஆண்டில் செயல் என்ற படத்தில் நாயகிக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஷாக்சி அகர்வால், ராஜா ராணி படத்தில், மிகச்சிறிய ரோலில் நடித்திருக்கிறார். ராஜா ராணி படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஷாக்சி அகர்வால் கூறியதாவது,

செகண்ட் ஹீரோயின்

என்னுடைய காஸ்டிங் ஏஜென்சி மூலமாக என்னை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பதற்கு பேசினார்கள். ஆர்யா ஹீரோ நீங்கள் செகண்ட் ஹீரோயின் என்று சொன்னார்கள். இரண்டு நாட்கள் மட்டும் ஷூட்டிங் சென்றேன்,

படம் ரிலீஸ் ஆகிவிட்டது

அதன்பிறகு ஷூட்டிங் அழைக்கவில்லை. சரி அழைப்பார்கள் என்று நானும் காத்திருந்தேன். ஆனால் கடைசியில் படம் ஷூட்டிங் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆகிவிட்டது.

அதற்கு பிறகு தான் அவர்கள் என்னை ஏமாற்றியது தெரிய வந்தது. இதுகுறித்து நான் துவக்கத்திலேயே இயக்குனர் அட்லியுடன் பேசியிருக்க வேண்டும் அப்படி செய்யாமல் விட்டது பெரிய தவறாகி விட்டது.

என்னை ஏமாற்றி விட்டார்கள்

வாய்ப்பு தரேன்னு சொல்லி 2 நாள் என்னை நடிக்க வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றி விட்டார்கள் என விஜய் பட இயக்குனர் அட்லி மீது ஷாக்சி அகர்வால் புகார் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.