Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

வைரமுத்துவின் டிவீட்க்கு அதிரவைக்கும் பதில் ட்வீட் ! பாடகி சின்மயி பளார்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியும் குரல் நடிகையாக இருப்பவர் சின்மயி ஸ்ரீபாதா. இவர் இந்தியாவில் மீ டூ இயக்கத்தின் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டில் மூத்த தமிழ் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியதிலிருந்து குரல் கொடுத்து வருகிறார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வைரமுத்துவை  சின்மயி குற்றம் சாட்டி வருகிறார், மேலும் நேற்றைய மகளிர் தினத்திற்கான வைரமுத்துவின் கவிதைக்கும் பதில் ட்வீட் ஒன்றி போட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

வைரமுத்து தனது மகளிர் தினப் பதிவில் தமிழில் கவிதை ஒன்றை , “மாலையும் நகையும் கேட்கவில்லை பெண்; மதித்தல் கேட்கிறாள். வீடும் வாசலும் விரும்பவில்லை பெண்; கல்வி கேட்கிறாள்.

ஆடம்பரம் அங்கீகாரம் ஆசைப்படவில்லை பெண்; நம்பிக்கை கேட்கிறாள். கொடுத்துப் பாருங்கள்; அவளே பாதுகாப்பாள் ஆண்களையும் உலக மகளிர் திருநாள் வாழ்த்து என இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

புகழ்பெற்ற பாடலாசிரியரின் இந்த  மகளிர் தின வாழ்த்துகளைத் தொடர்ந்து, சின்மயி, அவ்வீட்டு வாசலை தாண்டும்பொழுது
காம வெறியர்களை கேட்க்கவில்லை பெண்; பாதுகாப்பு கேட்க்கிறாள். பாலியல் குற்றவாளிகளை அடையாளம் காட்டும்பொழுது அவதூரு கேட்க்கவில்லை பெண்; நியாயம் கேட்கிறாள். இவ்வாறு பதில் ட்வீட் ஒன்றை கொடுத்திருந்தார்.

--Advertisement--

மேலும் சின்மயி இந்தியாவில் #MeToo இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பணியிடத்தில் பெண்களின் உரிமைகளுக்காகவும் வாதிடுகிறார். மேலும்  பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

பெண் வெறுப்பு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிற்பதற்காக அவர் நிறைய கஷ்டங்களையும் ஏற்கனவே எதிர்கொண்டார். கடந்த ஆண்டு, மகளிர் தினத்தன்று வைரமுத்து பெண்களைப் பற்றி எழுதிய பாடலைப் பற்றி ஒரு நாளிதழில் சின்மயி கடுமையாக விமர்சித்திருந்தார் தற்போது இன்றைய இந்த பதிவிலும் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த இரண்டு நபர்களின் ட்விட்டர் பதிவுகளிலும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். இதுபோல பல சுவாரசியமான சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நம்ம தமிழகம் இணையதள பக்கத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top