குடியால் அழிந்த நடிகைகள்.. Shooting Spot “அது” நடந்ததை பார்த்து மிரண்ட பிரபலம்..!

சினிமாவை பொறுத்தவரை திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அப்படி பெரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் அவர் அவர்கள் கடின உழைப்பால் தான் முன்னேற முடியும்.

அப்படி முன்னேறினாலும் கூட பல நடிகைகள் மோசமான சில பழக்கங்களால் தான் பட வாய்ப்புகள் பெறுகின்றனர் என்று சினிமாத்துறையினரே சமீப காலமாக பொது வழியில் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், பொதுவாக சில நடிகைகளிடம் இருக்கக்கூடிய கட்டப்பழக்கம் என்றால் அவர்களுடைய இரவு நேர விருந்து மற்றும் மதுப்பழக்கம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

அந்த வகையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அழிந்து போன நடிகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சில்க் ஸ்மிதா

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது நடிகை சில்க் ஸ்மிதா. 80 மற்றும் 90களில் மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் தவறான முடிவை எடுத்துக் கொண்டார்.

இவர் இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம்..? என்று தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா மது பழக்கத்திற்கு அடிமையானார். மது குடித்தால் மட்டுமே உறக்கம் வரும் என்ற நிலைக்கு மோசமான நிலைக்க தள்ளப்பட்டார்.

படப்பிடிப்பு தளங்களில் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் போது மது போதையிலேயே நடித்த சில்க் ஸ்மிதாவை கண்டு மிரண்டு போனதாக பல பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவே ஒரு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியது என்று கூறினார்கள். ஒரு கட்டத்தில் குட்டிப் பழக்கத்திற்கு மோசமாக அடிமையாகிப்போன இவர் தவறான முடிவை தேடிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிஷா கொய்ராலா

அதன் பிறகு நடிகை மனிஷா கொய்ராலா. கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்து விட்டார் மனிஷா கொய்ராலா என்ற கூறலாம்.

இதனை அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். சில நாட்கள் நான் ஏமாந்திருந்தால்.. இந்நேரம் இந்த உலகத்தில் இருந்திருக்க மாட்டேன் என்று தன்னுடைய பேச்சை ஆரம்பித்த நடிகை மனிஷா கொய்ராலா மதுப்பழக்கத்தினால் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது..

அதிலிருந்து வெளிவர நான் பட்ட கஷ்டங்கள் இவ்வளவுதான் என்று இல்லை என பேசி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் நடிக்கும் பொழுது வெட்கம் வரக்கூடாது. பயப்படக்கூடாது.. என்ற காரணங்களினால் மது பழக்கத்திற்கு மெல்ல மெல்ல தன்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார் மனிஷா கொய்ராலா.

ஹீரோவுடன் படுக்கையறை காட்சிகள் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் போது சிறிய அளவில் மது குடித்தால் கதாநாயகர்களுடன் கூச்சமின்றி நடிப்பதற்கு துணையாக இருக்கிறது என மது பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா.

ஒரு கட்டத்தில் அதுவே மனிஷா கொய்ராலாவை நாசம் செய்திருக்கிறது. மது குடிக்காமல் ஒரு நாளைக்கு கூட கடக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

மது போதையில் தள்ளாடியபடி பொதுவெளியில் தோன்றிய மனிஷா கொய்ராலாவின் புகைப்படங்கள் வீடியோக்களை இணையத்தில் இப்போதும் உங்களால் பார்க்க முடியும்.

ஒரு கட்டத்தில் புற்றுநோய் ஆளாகி இருக்கிறார் மனிஷா கொய்ராலா என்று கண்டறிந்த பிறகு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து பல்வேறு நவீன சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு புற்றுநோயிலிருந்து மீண்டு இருக்கிறார் மனிஷா கொய்ராலா.

நடிகை ஊர்வசி

அடுத்ததாக நடிகை ஊர்வசி.. கட்டிய கணவராலேயே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையை நாசம் செய்து கொண்டவர் ஊர்வசி. தன்னுடைய கணவரை விவாகரத்து செய்ய சென்ற போது எனக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்று நீதிமன்றத்தில் கூறுகிறார்கள்.. எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே என்னுடைய கணவரும் அவருடைய குடும்பத்தினரும் தான்.

என்னுடைய கணவரின் குடும்பத்தினர் அனைவரும் டைனிங் டேபிள் அமர்ந்து கொண்டு குடும்பமாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தில் தெரியாமல் நான் மருமகளாகி விட்டேன். என்னையும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள்.

தற்போது இதையே காரணமாக சொல்லி என்னை விவாகரத்தும் செய்ய வைத்து விட்டார்கள் என்று குமுறி இருந்தார் நடிகை ஊர்வசி என்பது குறிப்பிடத்தக்கது.

ரம்யா கிருஷ்ணன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் 40 ஆண்டு காலம் சினிமாவில் பயணித்திருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இரவு நேர விருந்தினர்கள் கலந்து கொள்வதற்கு இளம் நடிகைகள் போட்டோ போட்டி போடுகிறார்கள்.

பல இளம் நடிகைகளுடன் மது போதையில் இருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலாகின. சமீபத்தில் கூட லாக்டவுன் காரணத்தில் தமிழ்நாட்டில் மது கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனின் காரில் பாண்டிச்சேரியில் இருந்து மதுவை கொண்டு வந்தார் அவருடைய கார் ஓட்டுநர்.

அப்போது சோதனைச் சாவடியில் சோதனை செய்தபோது கையும் களவுமாக சிக்கினார். இந்த விவகாரம் இணையத்தில் அடிபட்டது அதன் பிறகு என்ன நடந்திருக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த விஷயத்தில் நடிகர் ரம்யா கிருஷ்ணனின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது.

ஸ்ருதிஹாசன்

பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இவர் மதுப்பழக்கத்திற்கு ரொம்பவே அடிமையாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

தன்னுடைய முதல் காதலன் பிரிவிற்கு பிறகு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான இவர் ஒரு கட்டத்தில் தன்நிலை உணர்ந்து மது பழக்கத்திலிருந்து விடுபட்டு இருக்கிறார் என்று அவரே சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

நயன்தாரா

நடிகை நயன்தாரா… நடிகர் சிம்புவுடன் காதல் முறிவுக்கு பிறகு திக்கு தெரியாமல் இருந்தார் நடிகை நயன்தாரா. ஒரு பக்கம் பிரபலம் கோடி கோடியாய் பணம் இருந்தாலும்… மறு பக்கம் காதல் தோல்வி என துவண்டு போயிருந்த நடிகை நயன்தாரா மதுவின் மீது நாட்டம் கொண்டு சில காலம் மதுவிற்கு அடிமையாக இருக்கிறார்.

அதே நேரத்தில் தன்னுடைய கொழுக் மொழுக் தொப்பையை குறைக்கும் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு உடல் ரீதியான சில பிரச்சினைகள் ஏற்பட்டு அவருடைய கர்ப்பப்பையை நீக்கும் அளவுக்கு சென்று இருக்கிறது.  உஷாராகி கொண்ட நடிகை நயன்தாரா இனிமேல் மது பக்கமே தலை வைத்து படக்கூடாது என்று மது பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்து பிரிந்தார். தற்பொழுது விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார்.

திரிஷா

தென்னிந்திய சினிமாவில்.. நடிகர்களுடன் சேர்ந்து கொண்டு அதிகமாக மது குடிக்கும் ஒரு நடிகை என்றால் அதன் நடிகை திரிஷா என்று தான் கூறுகிறார்கள். படப்பிடிப்பு முடிந்த பிறகு வார இறுதி நாட்களில் நைட் பார்ட்டி என மது குடித்தே தீர வேண்டும் என்பதுதான் த்ரிஷாவின் ஒரே நோக்கமாக இருக்கிறது.

வார இறுதி நாட்களில் இரவு நேரத்தில் கொடுக்கிறார் என்றால் ஓகே.. ஆனால் தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து கொண்டு தன்னுடைய வீட்டிலேயே பகல் நேரத்தில் மது குடித்து அட்டகாசம் செய்யும் த்ரிஷாவின் வீடியோ காட்சிகள் சமயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர்.

என்னதான் மது போதை என சுற்றித்திரிந்தாலும் காலை நேரங்களில் கடுமையான உடற்பயிற்சி மற்றும் முறையான உணவு முறை என தன்னுடைய இளமையை கட்டு குலையாமல் பாதுகாத்து வருகிறார் நடிகை திரிஷா.

திருமணம் செய்து கொண்டால் எங்கே மது குடித்து மகிழ்ச்சியாக இருக்க முடியாதோ என்ற பயத்திலேயே நடிகர் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.