Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

Tamil Cinema News

சொந்தக்காரன் கொடுத்த பாலியல் தொல்லை.. கடவுளே அவனுக்கு கொடுத்த தண்டனை.. நடிகை ஓப்பன் டாக்…!

பாலியல் தொல்லை என்பது, இப்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இளம்பெண்களுக்கு மட்டும்தான் இந்த பிரச்னை இருந்தது. இப்போது 3 வயது, 4 வயது குழந்தைகள் கூட இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.

வயதான மூதாட்டியை கூட காமுகர்கள் கற்பழித்து கொன்றும் விடுகின்றனர். சமீபத்தில் புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை இன்னும் மக்களின் மனதை விட்டு அகலவில்லை. அந்த துயரத்தின் வேதனை இன்னும் காயவில்லை.

ஷருதி ரஜினிகாந்த்

மலையாள சீரியல் நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த், இவர் மலையாள சீரியல் நடிகை. மாடலிங் தொழிலிலும் இருந்து வருகிறார். பிளவர்ஸ் டிவியில் ஓடிய சக்கப்பழம் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

ஆழப்புழாவில் பள்ளி படிப்பை முடித்த ஷ்ருதி ரஜினிகாந்த், வயநாடுவில் கல்லூரி படிப்பை முடித்தவர். கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் எம்ஏ படித்திருக்கிறார்.

--Advertisement--

குயின் எலிசபெத்

மலையாள சீரியல்களில் தொடர்ந்து நடித்து வரும் ஷ்ருதி, சமீபத்தில் குயின் எலிசபெத் என்ற படத்தில் ரோசினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மீரா ஜாஸ்மின், நரேன் நடித்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஷ்ருதி ரஜினிகாந்த், தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் அனுபவம் குறித்து வெளிப்படையாக அதில் கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:குட் நைட் பட ஹீரோயினுக்கு திடீர் கல்யாணம்..! மாப்பிள்ளை இவரு தான்..!

5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன்

நான் என்னுடைய குழந்தை பருவத்தில், பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். இப்போதும் நான் அதை என் வாழ்க்கையில் ஒரு இருண்ட பகுதியாகவே பார்க்கிறேன். நான் அப்போது 5ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தது என்னுடைய உறவினர் என்பதால் நான் வெளியே சொல்ல முடியவில்லை.

ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும்போது குழந்தைகள் இதை வெளிப்படையாக தங்களது பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெண்களும் இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் செய்த உறவினருக்கு…

என்னை பாலியல் துன்புறுத்தல் செய்த உறவினருக்கு இப்போது திருமணமாகி விட்டது. பெண் குழந்தை பிறந்துவிட்டது. பிறகு அவர் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார். நான் அப்போதும் அவனை என் சொந்த பந்தங்கள் முன்பு கேவலப்படுத்தவில்லை. ஆனால் அதை நான் செய்திருக்க முடியும்.

இதையும் படியுங்கள்: முதலிரவு அறையில் முரட்டு குடி.. போதை ஏற்றும் மிர்ணாளினி ரவி..

பெண் குழந்தை பிறந்து விட்டதால்…

அந்த பயம் இப்போதும் அவனுக்கு இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. இப்போது அவனுக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டதால் அந்த பயமும், குற்ற உணர்ச்சியும் மிக அதிகரித்து விட்டது. இந்த பயமும், குற்ற உணர்ச்சியும் அவனுக்கு காலம் முழுவதும் இருக்கும்.

நான் கொடுக்காத தண்டனையை கடவுள் அவனுக்கு கொடுத்து விட்டார் என்று அந்த நேர்காணலில் நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

கடவுளே தண்டனை

சொந்தக்காரனாக பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு, கடவுளே தண்டனை கொடுத்து விட்டது என்று நடிகை ஷ்ருதி ரஜினிகாந்தின் ஓப்பன் டாக் இப்போது வைரலாகி வருகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top