படுக்கையறை காட்சியில் நடிக்குறதுக்கு முன்னாடி இதை போட்டுக்குவேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை சோனா..!

படுக்கையறை காட்சியில் நடிக்குறதுக்கு முன்னாடி இதை போட்டுக்குவேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை சோனா..!

2002 ஆம் ஆண்டில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்ற நடிகை சோனா நடிகையோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்கிறார். இவர் கோலிவுட் படங்களில் தனது சிறந்த குத்தாட்ட நடனத்தின் மூலம் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து ஈர்த்திருக்கிறார்.

நடிகை சோனா..

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சோனா 2008-இல் குசேலன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கவர்ச்சியின் நடிகையாக பட்டையை கிளப்பி வந்த இவர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஸ்மோக் என்ற இணைய தொடரை இயக்கி உள்ளார்.

பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் கேரக்டர் ரோலில் அறிமுகமான இவர் கவர்ச்சி பக்கம் திரும்பி பத்து பத்து, மிருகம் உள்ளிட்ட படங்களில் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.


கவர்ச்சிகரமான வேடங்களில் நடித்ததலின் காரணமாக தனக்கு கவர்ச்சி நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டு திருமணம் கூட நடக்கவில்லை. திரைப்படத்தில் தான் கவர்ச்சியாக நடித்தேனை தவிர நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை என்று அவர் அனுபவித்த வலிகளை பல நேரங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கவர்ச்சி முத்திரையை கிழித்து எறிய தொலைக்காட்சி சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தால் அது நிச்சயம் மாறும் என்று நம்பி நடித்தும் அந்த நிலை மாறவில்லை. இதனை அடுத்து சினிமாவிற்குள் ஏன் வந்தோம் என்று சில சமயம் தோன்றியதாக கூறி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்

படுக்கையறை காட்சிக்காக இத போடுவேன்..

திரைப்படங்களில் நடிக்கும் போது பெரிய இடத்தை வாரிசுகளோடு கிசுகிசுக்கப்பட்ட இவர் பல சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

ஆனால் சினிமாவில் சக்கை போடு போட்டு வந்த காலத்தில் இவர் குடிக்கு அடிமையாகி இருந்தார் என்ற விஷயங்கள் பெருமளவு பரவி இருந்தது.


இதனை அடுத்து பிரபல கவர்ச்சி நடிகை சோனா சமீபத்திய பேட்டி ஒன்று படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு முன்பு ஒரு பெக் போட்டுக்கொண்டு தான் நடிப்பேன் அப்போது தான் எனக்கு எந்த விதமான கூச்சமும், பயமும் இல்லாமல் தத்துரூபமாக நடிக்க முடியும் என்று கூறியது ரசிகர்களின் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாக கூடிய அளவு சென்று விட்டதை அடுத்து மது பழக்கத்தில் இருந்து வெளி வருவதற்காக ஆன்மீகம், யோகா போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக கூறி இருக்கிறார்.

மேலும் அந்த குடிப்பழக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வந்து விட்டதாக கூறியவர் ஒரு சாதாரண பெண் போல் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று பேசிய பேச்சு இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.


2020 ஆம் ஆண்டில் பரமபத விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது நல்ல மனநிலையோடு இருப்பதாகவும், குடிப்பழக்கத்தை முற்றிலும் கைவிட்டதன் காரணத்தால் முதிர்ச்சியான மனநிலையில் உள்ளேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரது பேட்டியை அதிக அளவு பார்த்து தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் குடியிலிருந்து வெளி வந்த நடிகை சோனா மீண்டும் நடிப்பாரா? அல்லது திரைப்படங்களை இயக்குவாரா? என்று பல்வேறு விதமான கேள்விகளை கேட்டிருப்பதோடு ஆரோக்கியமாக வாழ குடிப்பழக்கத்தில் இருந்து மீள்வது மிகவும் முக்கியம், அதை திறம்பட செய்த நீங்கள் சிறப்பான முறையில் இருப்பீர்கள் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.