Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நிறைமாத கர்ப்பம்.. உடலோடு ஒட்டிய உடையில் நடிகை ஸ்ரீதேவி அஷோக் அழகிய புகைப்படங்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.


சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2004-ஆம் ஆண்டு வெளி வந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எனும் படத்தில் செல்வி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் ஆனார்.

நடிகை ஸ்ரீதேவி அசோக்..

ஸ்ரீதேவி அசோக் தமிழ் மொழி சீரியல்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை பக்குவமாக அமைத்துக் கொண்டார்.

சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் பக்குவமாக நடித்திருக்க கூடிய இவர் பல வில்லி கதாபாத்திரங்களை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

அந்த வகையில் இவர் கஸ்தூரி, இளவரசி, வாணி ராணி, தங்கம் போன்ற பல சன் டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். விஜய் டிவியை பொறுத்த வரை பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியலில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து கல்யாண முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்திருப்பது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

---- Advertisement ----


இந்நிலையில் ராஜா ராணி சீரியலில் வில்லியாக களம் இறங்கிய இவரது வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரை ரசிக்க ஆரம்பித்தார்.
அது மட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி வண்ண வண்ண உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

நிறைமாத கர்ப்பம்..

இந்நிலையில் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கக்கூடிய இவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவேற்றி இருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நிறை மாத நிலவே வா என்ற பாடல் வரிகளை பாடி இவரை வரவேற்று இருக்கிறார்கள். அத்தோடு இந்த சமயத்தில் எப்படிப்பட்ட போட்டோ ஷூட் தேவையா என்ற கேள்வியை பலரும் எழுப்பி இருக்கிறார்கள்.


உடலோடு ஒட்டிய உடையில்..

மேலும் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் வெள்ளை நிற மாடன் உடையை உடுத்தி தேவதையை போல் காட்சி அளித்து இருக்கிறார்.

ஒருவேளை இந்த புகைப்படத்தை பார்த்தால் சொர்க்கலோகத்தில் இருக்கும் சுந்தரிகளும் இவரைப் பார்த்து மயங்கி விடுவார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அந்த அளவு பார்க்கும் போதே மனதில் பதியக் கூடிய வகையில் இந்த புகைப்படங்கள் உள்ளது. வெண்ணிற ஆடையில் டைட்டான மாடன் உடையில் ரசிகர்களை பக்குவமாக இந்த புகைப்படம் கவர்ந்து விட்டது.


இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று சொல்லலாம்.

அழகிய புகைப்படங்கள்..

மேலும் அழகிய இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு தாய் வேறு பிள்ளை வேறு என்று சுகப்பிரசவம் ஆகி சூப்பராக வாழ வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறியிருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவீர்கள். மேலும் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து நீங்கள் பெற்ற மகிழ்ச்சியை அவர்களும் பெற வழி செய்வீர்கள்.

Continue Reading

More in Tamil Cinema News

Trending Now

To Top