Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

ஸ்ரீவித்யா கமல் காதல் பிரிவுக்கு காரணம் இவரு தான்..! குண்டை தூக்கி போட்ட பிரபல நடிகர்..!

15 வருடங்களுக்கு முன் உலக நாயகன் கமலஹாசன் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவை காணச் சென்றது பத்திரிகைகளில் பரபரப்பாக எழுதப்பட்டதோடு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் அளவு பேசப்பட்டது.

இதற்குக் காரணம் தன்னோடு நடித்த ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த போது நேரில் சந்தித்து இருக்கிறார் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றி இருப்பது இயல்பு தான். எனினும் உண்மையான காரணம் அதுவல்ல.

பின் அதற்கு காரணம் என்ன என்று நீங்கள் கட்டாயம் யோசித்து இருப்பீர்கள். அதற்கு உரிய காரணம் என்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் விளக்கமாக பார்க்க இருக்கிறீர்கள்.

பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் கமலஹாசன் மிகச்சிறந்த காதல் மன்னன் என்பது திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்த வகையில் ஸ்ரீவித்யா உடன் கமலஹாசன் நெருங்கி நிறைய படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் இவர்கள் நடித்த போது இருவரது கெமிஸ்ட்ரியும் மிகச் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது என்று சொல்லலாம்.

இந்தப் படத்தை அடுத்து நிஜ வாழ்க்கையிலும் இவர்களது கெமிஸ்ட்ரி வேலை செய்தது. ஸ்ரீவித்யா கமலஹாசனை விட இரண்டு வயது மூத்தவர் என்ற நிலையிலும் நிச்சயமாக ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு கமலஹாசன் இருந்திருக்கிறார்.

--Advertisement--

ஆனால் ஸ்ரீவித்யாவின் அம்மாவிற்கு கமலஹாசன் தனது மகளை உருகி, உருகி காதலிப்பது பிடிக்கவில்லை. மேலும் மீடியாக்களில் இவர்களது காதல் பற்றி அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்ததைப் பார்த்து மிகவும் கடுப்பாகி இருந்தார்.

இதனை அடுத்து ஸ்ரீவித்யாவின் அம்மா கமலை நேரில் அழைத்து என் பெண் பெரிய நடிகையாக வர வேண்டியவள். அது போலத் தான் நீயும், எனவே நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள் என்று சொல்லி விட்டார்.

இதனை அடுத்து மனம் நொந்து போன கமலஹாசன் ஸ்ரீவித்யாவிடம் நீ உன் வீட்டை எதிர்த்து வந்து விடு. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்ன போதும், ஸ்ரீவித்யா என் அம்மாவின் விருப்பத்தை தாண்டி நான் எதுவும் செய்ய மாட்டேன் என மறுத்த காரணத்தினால் தான் அவர் வாணி கணபதியை மணந்தார்.

இந்நிலையில் ஸ்ரீ வித்யா ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரது வாழ்க்கையை சூனியம் ஆக்கிக் கொண்டார். இதனை அடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவித்யா தனது இறுதி நாட்களில் தனது முன்னாள் காதலனை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார்.

அது நிமித்தமாகத்தான் கமலஹாசன், மரணப்படுக்கையில் இருக்கும் தனது முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நேரில் சென்று பார்த்திருக்கிறார் என்ற விஷயம் தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.

Continue Reading
 
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Tamil Cinema News

Trending Now

To Top