ராதிகாவை கட்டாயப்படுத்தி காதலித்த பிரபல நடிகர்..!! – தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று புகழப்படும் பாரதிராஜா கிராமத்து கதைகளை உயிரோடு அப்படியே சினிமாவில் படைப்பதில் வல்லவர். இவர் அறிமுகம் செய்து வைத்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் இன்று உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சுதாகரை அறிமுகம் செய்து வைத்தது பாரதிராஜா. தெலுங்கு பேசும் நடிகரான சுதாகரை தமிழுக்கு அறிமுகம் செய்த பிறகு இவர் தென்னிந்திய சினிமாவில் டாப் இடத்தை பிடித்தார்.

இந்த சூழ்நிலையில் தற்போது பத்திரிக்கையாளர் மற்றும் சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் அண்மை பேட்டி ஒன்றில் நடிகை ராதிகாவை வலுக்கட்டாயமாக காதலிக்க வேண்டும் என்று சுதாகர் கட்டாயப்படுத்தியதாக கூறியதோடு ராதிகாவை நடிகர் சுதாகர் தொடர்ந்து காதலித்ததாகவும் கூறி இருக்கிறார்.

இந்த தகவலானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் ராதிகா சுதாகரை காதலிக்காததை அடுத்து ஜெயசித்ராவை காதலிப்பதாக கூறி சுதாகர் டார்ச்சர் செய்திருக்கிறார்.

--Advertisement--

மேலும் ஜெயசித்ரா தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கட்டாயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ரோஜா பூவை கொடுத்து வலு கட்டாயமாக காதலித்து வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் ஜெயசித்ரா கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சுதாகர் கேட்டதாகவும், அதற்கு நான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் எல்லாம் உனக்குத்தானே என்று ஜெயசித்ரா சொன்னதாகவும் பல்வேறு விஷயங்கள் வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.

ஆனால் கடைசியில் ஜெயசித்ராவையும் திருமணம் செய்து கொள்ளாமல், கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் சுதாகர். தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவு மாறி இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து சுதாகர் ஒரு பிளே பாய் போல செயல்பட்டு இருப்பாரோ? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.இன்னும் இது போல எத்தனை நடிகைகளின் பின் அவர் சுற்றி திரிந்தார் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என சில ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.