முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக, முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகைகள் பலரது திருமண வாழ்க்கை பலத்த தோல்வியில் முடிவடைகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்த நடிகைக்கு கட்டுப்பட்ட கணவராக அவர் இல்லாததுதான். நடிகைக்கு கூஜா தூக்கும் கணவராக இருந்தால், காலம் முழுவதும் அந்த நடிகையின் கணவர் என்ற பெருமையோடு, வசதியாக வாழ்ந்து விடலாம்.

சுகன்யா

நடிகை சுகன்யா, பாரதிராஜா இயக்கத்தில் புதுநெல்லு புதுநாத்து படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சோலையம்மா, சின்னக்கவுண்டர், வால்டர் வெற்றிவேல், மகாநதி, இந்தியன், திருமதி பழனிசாமி, செந்தமிழ்பாட்டு, சின்ன மாப்ளே உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஒரு படத்தில் கூட

ஆனால் சுகன்யா, நடிகர் ரஜினிகாந்துடன் மட்டும் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. முத்து படத்தில் மீனா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது சுகன்யாதான்.

ஆனால் அப்போது தொடர்பில் கிடைக்காததால் அந்த படத்தில் சுகன்யா நடிக்க முடியாமல் போயிருக்கிறது. இதை, முத்து படத்தின் டைரக்டர் கேஎஸ் ரவிக்குமாரே சுகன்யாவிடம் ஒருமுறை கூறியிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் ஆனந்தம் போன்ற சீரியல்களிலும் நடித்தார் சுகன்யா.

அசத்தல் அழகு

பல படங்களில், சீரியல்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சுகன்யாவுக்கு இப்போது 51 வயதாகிறது. எனினும் இப்போதும் அதே அசத்தல் அழகுடன் சுகன்யா காணப்படுகிறார்.

திருமணம்

கடந்த 2002ம் ஆண்டில் ஸ்ரீதர் என்பவரை சுகன்யா திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், 2003ம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இரண்டே ஆண்டுகள் மட்டுமே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது.

அவர்கள் பிரிவுக்கான காரணம் கருத்து வேறுபாடுதான் என்றாலும், அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த நிலையில் அதற்கான காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதையும் படியுங்கள்: காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..

அரசியல்வாதி கட்டுப்பாட்டில்

சமீபத்தில் நடிகை சுகன்யா குறித்து பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது,

கடந்த 2001ம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்த போது, அமைச்சராக இருந்த ஒருவரது அரவணைப்பில் சுகன்யா இருந்துள்ளார். அவரது கட்டுப்பாட்டில் தனி பங்களாவில் வைத்து, அவர் சுகன்யாவுடன் வாழ்ந்துள்ளார்.

மறுப்பு தெரிவிக்கவில்லை

இது பலருக்கும் தெரிந்த உண்மைதான். அப்போதே அது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் இந்த தகவல் குறித்து சுகன்யா, அந்த அரசியல்வாதி இருவருமே மறுப்பு தெரிவிக்கவில்லை.

அரசியல்வாதியின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை, என்று அந்த வீடியோவில் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

தனிமையில் வாழ்கிறார்

இந்த அரசியல்வாதி விவகாரம் காரணமாக தான், சுகன்யா தனது கணவரை விட்டு பிரிந்திருக்கிறார். மேலும் அதன் பிறகு அவர் திருமணமே செய்துக்கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அமைச்சரின் அரவணைப்பில்

அதிமுக அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா இருந்ததுதான், அவரது திருமண வாழ்க்கை முறிவுக்கு காரணம் என பல நாள் ரகசியத்தை உடைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.