மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

மரியாதைக்குரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒருவரது மேற்பார்வையில் இருந்தால் வாலை சுருட்டிக்கிட்டு இருந்தாக வேண்டும். அதாவது மிகவும் நேர்த்தியாக, கட்டுப்பாடுகளை பின்பற்றி வாழ வேண்டும்.

ஆனால் கட்டுப்படுத்தவோ, கேள்வி கேட்கவோ ஆளில்லாத ஒரு இடத்தில் இருந்தால் நம் இஷ்டப்படி சுதந்திரமாக இருக்கலாம். அத்துமீறியும் நடந்துக்கொள்ளலாம் என்பது வாழ்வியல் சொல்லும் படமாக இருக்கிறது. அதைத்தான் நடிகை ஜோதிகா இப்போத நிறைவேற்றிக் காட்டிக்கொண்டு இருக்கிறார்.

ஜோதிகா

மும்பை பெண் ஜோதிகா, தமிழ் சினிமாவில் நடித்தார். அப்போது சூர்யாவுடன் காதல் ஏற்பட்டது. நடிகர் சிவக்குமார், கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்தவர்.

கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த விவசாயத்தை பின்புலமாக கொண்ட குடும்பம். மும்பையை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஜோதிகாவை, முதலில் மறுத்தாலும், தன் மகன் சூர்யா விருப்பத்துக்காக ஒரு கட்டத்தில் மருமகளாக ஏற்றுக்கொண்டார்.

குடும்பத்துக்கு கட்டுப்பட்டவராக…

ஆனால் துவக்கத்தில் சிவக்குமார் குடும்பத்துக்கு கட்டுப்பட்டவராக இருந்த ஜோதிகா, ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த குடும்பத்தின் கட்டுப்பாடுகளை மீற துவங்கினார். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அதை சிவக்குமார் குடும்பத்தினர் விரும்பவில்லை.

இதையும் படியுங்கள்: இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

சென்னையில், சிவக்குமார் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்தால் மீண்டும் சினிமாவில் நடிக்க குறுக்கீடு அதிகரிக்கும் என்பதால் அவர் போட்ட பிளான்படி குடும்பத்தையே மும்பைக்கு ஷிப்ட் செய்துவிட்டார்.
இப்போது அவரது செயல்பாடுகள் அனைத்தும், இதற்குத்தான் மும்பைக்கு குடிபெயர்ந்தாரா என்று எண்ணத்தை உறுதிபடுத்தி வருகிறது.

புடவை சகிதமாக

தமிழ்நாட்டில் இருக்கும் வரை எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் புடவை சகிதமாக சென்று வந்த நடிகை ஜோதிகா இணைய பக்கங்களில் அந்த அளவுக்கு ஆக்டிவாக இருந்தது கிடையாது.

ஆனால் தற்பொழுது மும்பைக்கு குடி பெயர்ந்த பிறகு ஜிம் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சியான உடைகளை

மேலும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொழுது கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தோன்றி வருகிறார்.

இதையும் படியுங்கள்: கவுண்டமணி குறித்து பலரும் அறியாத 10 மர்மங்கள்..

அடக்க ஒடுக்கமாக

இதனை பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது அடக்க ஒடுக்கமாக ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த ஜோதிகா தற்போது மும்பைக்கு சென்றதும், கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி செய்து கொண்டு தன்னுடைய சொகுசு வாழ்க்கையை படம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறாரே.. என்று ஆச்சரியப்படுகின்றனர்.

சிவக்குமார் கோபம்

சமீபத்தில் தனக்கு சால்வை போட வந்த ஒரு ரசிகரிடம் இருந்து அந்த சால்வையை பிடுங்கி கீழே வீசினார் சிவக்குமார்.. இதனால்தான் பொது வெளிகளுக்கு வந்தால் கூட நடிகர் சிவகுமார் தன்னுடைய ரசிகர்களிடம் கோபப்படுகிறாரோ என்றும் பேசி வருகின்றனர் இணையவாசிகள்.

மும்பையில் இப்படி உடல் அழகை கவர்ச்சி உடையில் தூக்கலாக காட்டி அட்ராசிட்டி செய்தால் தானே படங்கள் வாய்ப்பு குவியும், இன்னும் சொகுசு வாழ்க்கை வாழலாம் என படம் போட்டு காட்டுகிறார் ஜோதிகா. பாவம், இனி சூர்யா வேடிக்கை தானே பார்க்க முடியும்.

   

--Advertisement--